(ஆர்.யசி)
முன்னாள் விடுதலைப் புலி போராளிகளுக்கு நிதி நிவாரண உதவிகளை வழங்குவது புலிகளை ஆதரிப்பதற்கு சமமானதாகும் என ஜனாதிபதி அமைச்சரவையில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை வெளிப்படுத்தும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு நேற்று காலை தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது.இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சரவை இணைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன இதனைக் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது காணமால்போனோரின் குடும்பங்களுக்கும், யுத்தத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கும், யுத்தத்தில் உபாதைகளுக்கு உள்ளன நபர்களுக்கும் மற்றும் முன்னாள் விடுதலைப்புலி போராளிகளுக்கும் என அனைவருக்குமான வாழ்வாதார நிவாரண தொகை வழங்கப்படுவது குறித்து அமைச்சர் சுவாமிநாதன் கடந்த அமைச்சரவையில் அமைச்சரவை பத்திரம் ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.
எனினும் இந்த அமைச்சரவை பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் என்ற பதத்தை அகற்றுமாறும் அவர்களுக்கு நிதி நிவாரணங்களை செய்வது புலிகளை ஆதரிப்பதற்கு சமமானது என்ற எண்ணப்பாட்டை ஏற்படுத்திவிடும் என ஜனாதிபதி தெரிவித்து குறித்த அமைச்சரவை பத்திரத்தை நிராகரித்துள்ளார்.
இந்த நாட்டில் புலிகளை ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது, எனினும் முன்னைய ஆட்சியில் முன்னாள் புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். அவர்களை அரச நிவாரண நிதிகளுக்குள், சாதாரண மக்களுக்கு வழங்கப்படும் உதவிகளின் கீழ் கொண்டுவர முடியாது.
யுத்தத்தில் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு செய்ய வேண்டிய நிதி உதவிகள் மற்றும் நிவாரணங்கள் என்பன தாமதமாகியுள்ளன. அவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க வேண்டும். அதேபோல் விடுதலைப் புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகளில் பாதிக்கப்பட்ட ஏனைய பகுதி மக்களுக்கும் நிவாரணங்களை வழங்க வேண்டும். அதற்கான பிரத்தியேக அமைச்சரவை பத்திரம் உள்ளது. நாம் எவரையும் புறக்கணிக்கவில்லை என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM