தான் கடந்த 70 ஆண்டுகளாக எந்தவிதமான தண்ணீர், உணவின்றி வாழ்ந்து வருவதாக இந்திய குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 88 வயது சாமியார் ஒருவர் தெரிவித்துள்ளார். இவரின் உடல்நிலையைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் மிகப்பெரிய அதிசயம் என்று வியக்கின்றனர்.
குஜராத் மாநிலம் மேக்சனா மாவட்டம், சாரோட் கிராமத்தில் வசித்து வரும் 88 வயதான பிரகலாத் ஜனி என்பவர், உணவுக்குப் பதிலாக நாள் முழுவதும் தியானத்திலிருந்து காற்றை மட்டுமே குடித்து வாழ்ந்து வருகின்றார். இதனால், உலக அளவிலுள்ள இவரின் சீடர்கள் ‘சுவாச ஞானி’ என்று அழைக்கின்றனர்.
இவர் உயிர் வாழும் அதிசயம் குறித்து ஆய்வு செய்ய இதுவரை பல்வேறு மருத்துவர்கள் மற்றும் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆகியோர் இந்தச் சாமியாரை ஆய்வு செய்துள்ளனர்.
இவரை ஆய்வு செய்த மருத்துவர்கள், எந்த அடிப்படையில் இவர் உயிர்வாழ்ந்து வருகிறார், உடல் உறுப்புகள் எப்படி இயங்குகின்றன என்பது புரியாமல், குழம்பியுள்ளனர். ஆனால், ஏதோ மிகப்பெரிய அதிசயம் ஒன்றால் மட்டும் பிரகலாத் சாமியார் வாழ்வதை ஒப்புக்கொள்கின்றனர்.
கடந்த 2010ஆம் ஆண்டு மத்திய பாதுகாப்புத் துறையின் மருத்துவம் மற்றும் அறிவியல் துறை, மத்திய பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) ஆகியவற்றில் இருந்து சாமியார் பிரகலாத்தை ஆய்வு செய்தனர். அவரை 15 நாட்கள் கண்காணிப்பில் வைத்தனர். அவரைச் சுற்றி கெமராக்கள் பொருத்திக் கண்காணித்தனர். பிரகலாத் சாமியாருக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட், எக்ஸ்ரே, ரேடியாலஜி, பயோகெமிக்கல் உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன.
ஆனால், ஆய்வின் முடிவில், சாமியார் பிரகலாத், தனது உடலில் மிகவும் உச்சகட்டமாக பசியைத் தாங்கும் சக்தியும், தண்ணீர் தாகத்தை தாங்கும் சக்தியும், ேஹார்மோன்களை கட்டுப்படுத்துதல், சக்தியை மிச்சப்படுத்துதல் போன்றவற்றை அபாரமாகச் செய்து வருகிறார் என்று அறிக்கை அளித்துவிட்டுச் சென்றுள்ளனர்.
பிரதமர் மோடி, குஜராத் மாநிலத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சாமியார் பிரகலாத்தை சந்தித்து ஆசி பெற்றமையும் சிறப்பம்சமாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM