எலிசபெத் மகாராணியின் விருது பெற இலங்கைப் பெண்ணான பாக்கியா விஜயவர்த்தன தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மகாராணியின் இளம் தலைவர் விருதை இவர் பக்கிங்ஹாம் மாளிகையில் எலிசபெத் மகாராணியிடம் இருந்து பெற்றுக் கொள்ளவுள்ளார்.
இவ் விருது வழங்கும் நிகழ்வு இம்மாதம் 26ஆம் திகதி செவ்வாய்க் கிழமை இடம்பெறவுள்ளது.
சமூகத்தில், நாட்டில் வாழ்க்கையை மாற்றி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்ட இளம் தலைமுறையினருக்கே “மகாராணி இளம் தலைவர் விருது” வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த இளம் தலைமுறையினருக்கு வழங்கப்படுகிறது.
இலங்கை சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த 29 வயதான பாக்கியா உணவுப் பாதுகாப்பை மக்களிடையே ஊக்குவித்தமைக்காக இவ்விருது அவருக்கு வழங்கப்படுகிறது.
பாக்கியா வீட்டில் வீட்டுத் தோட்டத்தில் இருந்து உணவுப் பொருட்கள், காய்கறி, பழவகைகளை உற்பத்தி செய்யுமாறு பொதுமக்களை தூண்டி வந்துள்ளார்.
ஆயிரக் கணக்கான போட்டியாளர்களிடையே இலங்கையைச் சேர்ந்த பாக்கியா தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM