அட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை பெயார்வெல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் முச்சக்கரவண்டி ஒன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் காயமடைந்த 3 பேர் லிந்துலை வைத்தியசாலையில் கிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தலவாக்கலை பகுதியிலிருந்து லிந்துலை மட்டுக்கலை பிரதேசத்திற்கு சென்ற முச்சக்கரவண்டியே இவ்வாறு குறித்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கரவண்டி சாரதிக்கு மயக்க தன்மை ஏற்பட்டதன் காரணமாக குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக லிந்துலை பொலி ஸார் மேற்கொண்ட ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
காயமடைந்தவர்களில் முச்சக்கரவண்டி ஓட்டுனர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தில் காயமடைந்த கணவன், மனைவி இருவரும் லிந்துலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM