சிங்கராஜ வனம், கன்னெலிய வனாந்தரம் மற்றும் அதனை அண்டிய அழகிய பகுதிகளை பார்வையிடுவதற்காக செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்காக சுற்றுலா விருந்தோம்பல் இல்லங்களை ஆரம்பிப்பதற்கான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக வனவளத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த பகுதிகளில் வீட்டுடன் ஓரளவு இடவசதியுள்ளவர்களை இணைத்துக்கொண்டு இவ் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வனாந்தரப்பகுதிகள் மற்றும் வேறு இடங்களை பார்வையிடுவதற்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு இந்த விருந்தோம்பல் இல்லங்களை வாடகைக்குக் கொடுக்க முடியும். இதனூடாக இந்த இல்லங்களைச் சூழவுள்ள மரக்கறிகள், பழவகைகள் போன்றவற்றையும் அங்கு தங்கும் சுற்றுலாப்பயணிகள் உணவுக்காக பெற்றுக்கொள்ளலாம்.
3 அல்லது 4 பேர் கொண்ட குடும்பங்களோ அல்லது தனிநபர்களோ இந்த இல்லங்களை வாடகைக்குப் பெற்றுக்கொள்ளலாம். 2 அல்லது 3 அறைகளைக்கொண்ட இந்த இல்லங்களை சுற்றுலாப்பயணிகளுக்கு ஏற்றவகையில் நவீனமயப்படுத்தி வாடகைக்கு வழங்க வேண்டுமென வனவள பாதுகாப்புத் திணைக்களம் இந்த வேலைத்திட்டத்துடன் தொடர்புபட்டவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
குறித்த இல்லங்களை புதுப்பிக்கவோ நவீனமயப்படுத்தவோ உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் வீட்டு உரிமையாளர்களுக்கு தலா 3 இலட்சம் ரூபா வீதம் நிவாரண அடிப்படையில் நிதியுதவியை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதனடிப்படையில் இப் பகுதியில் உள்ள மக்களது வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதே தமது நோக்கம் எனவும் வனவளத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM