தற்போதைய சூழலில் பல இளைய தலைமுறையினர் வருவாய் ஈட்டுவதற்கு தான் முக்கியத்துவம் தருகிறார்கள்.
ஆரோக்கியத்தைப் பற்றி அக்கறையும் கொள்வதில்லை. கவலையும் படுவதில்லை. நன்றாக சம்பாதித்த பிறகு மீதமுள்ள வாழ்க்கையை அமைதியாக அனுபவிக்கலாம் என்று எண்ணும் போது உடலியல் கோளாறுகள் ஒவ்வொன்றாக ஏற்படுகிறது.
அதிலும் முக்கியமானது தூக்கமின்மை. அதனால் அவர்கள் தூக்கம் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்கள்.
ஒரு நாள் முழுவதும் நீங்கள் தூங்கவில்லை என்றால், அடுத்த நாள் உங்களுக்கு கண் எரிச்சல், சோர்வு, கோபம், எரிச்சல், மன உளைச்சல், தலைவலி, எதிலும் மனதை ஒருமுகப்படுத்த இயலாமை போன்ற பல பாதிப்புகள் ஏற்படும்.
எம்முடைய உடலில் பகலில் ஒருவகையினதான ஹோர்மோன் சுரப்பிகள் தங்களுடைய பணியை மேற்கொள்கின்றன. இரவில் வேறு வகையினதான ஹோர்மோன் சுரப்பிகள் தங்களுடைய பணியை மேற்கொள்ளும்.
இவைகள் இயல்பாக செயலாற்றுவதால் எம்முடைய இரத்த அழுத்தத்தையும், சர்க்கரையின் அளவையும் கட்டுக்குள் வைத்துக் கொண்டு உடலை சீராக பராமரிக்கப்படுகிறது. பெண்களைப் பொறுத்தவரை அவர்களின் உறக்கம் கெட்டால், அவர்களின் மாதவிடாய் சுழற்சியில் பாதிப்பு ஏற்படலாம். குழந்தையின்மை கூட ஏற்படலாம். அதனால் தூக்கம் என்பது மனதிற்கும், உடலுக்கும் இவ்விரண்டின் ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது.
தூக்கத்தின் போது அவர்களுடைய மூளை மற்றும் உடலுக்கு தேவையான ஓக்ஸிஜன் கிடைக்காத காரணத்தால், அவர்கள் அடுத்த நாள் காலையில் எழுந்திருக்கும் போது,சோர்வு, தலைவலியால் பாதிக்கப்படுவர். அதன் தொடர்ச்சியாக அன்றைய தினம் முழுவதும் அசதியாகவேயிருப்பார்கள். மூளைக்கு போதிய அளவு ஓக்ஸிஜன் கிடைக்காததால் எரிச்சல் மற்றும் கோபமான மனநிலையிலேயே இருப்பார்கள். மன உளைச்சலுக்கும் ஆளாகுவார்கள். ஒரு சிலருக்கு நினைவுத்திறன் பாதிக்கப்படலாம்.
இதனை சரியான தருணங்களில் கண்டறிந்து சிகிச்சையெடுத்து குணமடையவில்லை என்றால், இதன் காரணமாக இரத்த அழுத்தம், பக்கவாதம், சர்க்கரை நோய் போன்றவை வரக்கூடும். ஏற்கனவே சர்க்கரை நோயும், இரத்த அழுத்தமும் இருந்தால் அவர்களுக்கு இந்த இரண்டு நோயும் கட்டுப்படுத்த முடியாத நிலைக்குச் சென்றுவிடும். எனவே தூக்கத்தின் அவசியத்தை உணர்ந்து நாளாந்தம் குறைந்த பட்சம் ஏழு மணித்தியாலம் வரையிலாவது தொடர்ச்சியாக இரவு நேரங்களில் உறங்க வேண்டும்.
டொக்டர் என். ராமகிருஷ்ணன்.
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM