வவுனியா தரணிக்குளம் பகுதியில் 11 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்து இன்று சிறுமியின் தந்தையை பொலிசார் கைது செய்துள்ளதாக ஈச்சங்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியா தரணிக்குளம் பகுதியில் வசித்து வந்த 11வயது பாடசாலை மாணவியை அவரது தந்தை நேற்று இரவு பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டள்ளதாக இன்று ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் தாய் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமி முறைப்பாட்டினை மேற்கொண்டனர்.
இதையடுத்து ஈச்சங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுபாஸ் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் நிஜாம் தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினர் தந்தையை கைது செய்துள்ளதுடன் சிறுமியை வைத்திசாலையில் மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட ஈச்சங்குளம் பொலிசார் கைது செய்யப்பட்ட சந்தேக நபரான தந்தையை இன்று பிற்பகல் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தியபோது எதிர்வரும் 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM