(நா.தனுஜா)
இன்புளுவென்சா வைரஸ் நோய் அறிகுறிகளுடன் எம்பிலிபிட்டிய பகுதியில் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். எனவே குறித்த வைரஸ் சப்ரகமுவ மாகாணத்தின் சில பிரதேசங்களை நோக்கி பரவும் அபாயமுள்ளது. ஆகவே பொதுமக்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவது அவசியம் என எம்பிலிபிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி என்.எச்.தர்மதிலக தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கடந்த சில வாரங்களாக 20 தொடக்கம் 30 வரையிலான நோயாளர்கள் இன்புளுவென்சா வைரஸ் நோய்க்கான அறிகுறிகளுடன் எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நோய் நிலைமையானது கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும் தற்போது எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் இன்புளுவென்சா வைரஸ் நோய் அறிகுறிகளுடன் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமையினால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுவது அவசியமாகும்.
எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் இன்புளுவென்சா வைரஸ் காரணமாக இறப்புக்கள் எவையும் பதிவாகவில்லை. ஆனாலும் தென் மாகாணத்தின் சில பகுதிகளை நோக்கி வைரஸ் பரவுகை ஏற்படும் அபாயமுள்ளது. ஆகவே பொதுமக்கள் பொருத்தமான முன்னெச்சரிக்கை நடைமுறைகளைப் பின்பற்றுவது அவசியமாகும் என்றார்.
தற்போது தென் மாகாணத்தில் பரவிவரும் இன்புளுவென்சா வைரஸ் காய்ச்சல் காரணமாக 14 பேர் மரணித்துள்ளனர். எனவே வைத்தியசாலைகளில் மேற்படி நோய் அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளைக் கண்காணிப்பதற்கென சுகாதார அமைச்சினால் 19 பொது கண்காணிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அரச வைத்தியசாலைகளில் இன்புளுவென்சா நோய் அறிகுறிகளுடன் சிகிச்சை பெறும் நோயாளர்கள் தொடர்பில் மேற்படி கண்காணிப்பு நிலையங்கள் அறிக்கைப்படுத்தலை மேற்கொள்ளும். அதன்மூலம் வைரஸ் பரவுகையினை பிரதேச அடிப்படையில் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் முடியும் என பிரதி சுகாதார அமைச்சர் பைஸல் காசிம் தெரிவித்துள்ளார்.
எனினும் தனியார் வைத்தியசாலைகளுக்கு இவ்விடயம் தொடர்பில் எவ்விதமான அறிவுறுத்தல்களும் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM