பாராளுமன்றத்திற்காக பிரதி சபாநாயகர் நியமனம் இன்று இடம்பெறவுள்ளது.
இன்று பாராளுமன்றம் கூடும் போது பிரதி சபாநாயகர் ஒருவர் தெரிவு செய்யப்படவுள்ளதாக பாராளுமன்ற பிரதி செயலாளர் நீல் இத்தவெல தெரிவித்தார்.
பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக இருந்த திலங்க சுமதிபால அரசாங்கத்திலிருந்து விலகியதையடுத்து அந்தப்பதவி வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.
அவர் விலகியது தொடர்பாக இன்று சபாநாயகரால் பாராளுமன்றத்துக்கு அறிவிக்கப்படவுள்ளது.
கூட்டு எதிர்க்கட்சி சார்பாக பிரதி சபாநாயகர் பதவிக்கு சுதர்ஷனி பெர்ணாந்தோபுள்ளேயின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 11 மணியளவில் கூடவுள்ள கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டத்தில் இது தொடர்பில் இறுதி தீர்மானம் எட்டப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் முன்வந்தால் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
இதேவேளை இன்று பாராளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்னதாக கட்சித் தலைவர்களின் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
இன்று பகல் 12.00 மணியளவில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இந்த கட்சித் தலைவர்களின் கூட்டம் இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM