20 ஆவது திருத்த சட்­ட­மூலம் தமி­ழீ­ழத்தை உரு­வாக்கும் - விமல்

Published By: Vishnu

05 Jun, 2018 | 08:37 AM
image

(ஆர்.யசி)

, புலம்­பெயர் அமைப்­பு­களின் தேவை­க­ளுக்­காக நாட்­டினை மாற்­றி­ய­மைக்­க­வுமே ஐக்­கிய தேசியக் கட்சி முயற்­சித்து வரு­கின்­றது என தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலைவர் விமல் வீர­வன்ச எம்.பி. தெரி­வித்தார். 

நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை நீக்கும் வகையில் மக்கள் விடு­தலை முன்­னணி தனி நபர் பிரே­ர­ணை­யாக கொண்­டு­வந்­துள்ள 20ஆம் திருத்தம் குறித்து கருத்து தெரி­விக்கும் போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். 

இது குறித்து அவர் மேலும் கூறு­கையில் 

ஐக்­கிய தேசியக் கட்சி புலம்­பெயர் புலி அமைப்­பு­க­ளுக்கு கொடுத்­துள்ள வாக்குறுதிகளை நிறை­வேற்றும் வகையில் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறைமையை இல்­லா­தொ­ழித்து அதன் மூல­மாக வடக்கு மாகா­ண­சபை தடைகள் இன்றி செயற்­ப­டவும், புலி­களின் செயற்­பா­டுகள் மீண்டும் பல­ம­டை­யவும் பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க முய­ற்­சிக்­கின்றார். 

அவ்­வாறு பிர­தமர் நினைக்கும் தேவைக்கு ஏற்­பவே மக்கள் விடு­தலை  முன்னணி 20 ஆவது திருத்தச் சட்­டத்தை கொண்டு வரு­கின்­றது. பிரதமரின் கோரிக்­கை­களை நிறை­வேற்­று­வதில் ஜே.வி.பி. யின் பங்­க­ளிப்பே அதி­க­மாக உள்ளது. அதற்­கா­கவே தனி நபர் பிரே­ர­ணை­யாக 20 ஆவது திருத்த சட்­டத்தை கொண்­டு­வந்து நிறை­வேற்றி ஜனா­தி­பதி முறை­மையை முழு­மை­யாக இல்லாதொழிக்கும் நட­வ­டிக்­கை­களை ஜே.வி.பி. கையாண்டு வரு­கின்­றது. 

மக்கள் வாக்கு மூல­மாக நாட்­டுக்­கான ஜனா­தி­பதி ஒரு­வரை தெரிவு செய்து நாடினை ஆளு­வதா அல்­லது அர்­ஜுன மகேந்­திரன் போன்­ற­வர்­களின் பணத்­திற்கு விலை­போன அர­சாங்­கத்தைக் கொண்டு அவர்­க­ளுக்கு ஏற்றாற் போல் ஒரு ஜனாதிபதியை கொண்டு ஆட்­சியை நடத்­து­வதா சிறந்­தது என்­பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.

தற்போது வடக்கு மாகாண சபை தனி இராஜ்­ஜியம் கோரும் நோக்­கி­லேயே  தனது நகர்வுகளை முன்னெடுத்து செல்கின்றது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41