(ஆர்.யசி)
, புலம்பெயர் அமைப்புகளின் தேவைகளுக்காக நாட்டினை மாற்றியமைக்கவுமே ஐக்கிய தேசியக் கட்சி முயற்சித்து வருகின்றது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச எம்.பி. தெரிவித்தார்.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கும் வகையில் மக்கள் விடுதலை முன்னணி தனி நபர் பிரேரணையாக கொண்டுவந்துள்ள 20ஆம் திருத்தம் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்
ஐக்கிய தேசியக் கட்சி புலம்பெயர் புலி அமைப்புகளுக்கு கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்து அதன் மூலமாக வடக்கு மாகாணசபை தடைகள் இன்றி செயற்படவும், புலிகளின் செயற்பாடுகள் மீண்டும் பலமடையவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கின்றார்.
அவ்வாறு பிரதமர் நினைக்கும் தேவைக்கு ஏற்பவே மக்கள் விடுதலை முன்னணி 20 ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டு வருகின்றது. பிரதமரின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் ஜே.வி.பி. யின் பங்களிப்பே அதிகமாக உள்ளது. அதற்காகவே தனி நபர் பிரேரணையாக 20 ஆவது திருத்த சட்டத்தை கொண்டுவந்து நிறைவேற்றி ஜனாதிபதி முறைமையை முழுமையாக இல்லாதொழிக்கும் நடவடிக்கைகளை ஜே.வி.பி. கையாண்டு வருகின்றது.
மக்கள் வாக்கு மூலமாக நாட்டுக்கான ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்து நாடினை ஆளுவதா அல்லது அர்ஜுன மகேந்திரன் போன்றவர்களின் பணத்திற்கு விலைபோன அரசாங்கத்தைக் கொண்டு அவர்களுக்கு ஏற்றாற் போல் ஒரு ஜனாதிபதியை கொண்டு ஆட்சியை நடத்துவதா சிறந்தது என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.
தற்போது வடக்கு மாகாண சபை தனி இராஜ்ஜியம் கோரும் நோக்கிலேயே தனது நகர்வுகளை முன்னெடுத்து செல்கின்றது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM