பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருந்த பல்லைக்கழக மாணவன்ஒருவரின் கை துண்டிக்கப்பட்டு வீதியில் வீசப்பட்ட சம்பவமொன்று நேற்று பெல்மதுளையில் இடம்பெற்றுள்ளது.
பெல்மதுளை–சன்னஸ்கம, கிரிவெல்தெனிய சந்தியில் இடம் பெற்ற இச் சம்பவத்தில் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் ஒருவரின் கையே இவ்வாறு துண்டிக்கப்பட்டு வீசப்பட்டுள்ளது.
வீதியில் வீசப்பட்ட கையுடன் பல்கலைக்கழக மாணவன் இரத்தினபுரி அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஆரம்ப சிகிச்சை நடத்தப்பட்ட பின் அவசரமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சத்திரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.பஸ்ஸின் பின் வரிசையில் வலது பக்கமாகவுள்ள கண்ணாடி ஜன்னலுக்கு வெளியில் வலது கை முழங்கையை வெளியில் நீட்டியவாறு வைத்து பயணித்துக் கொண்டிருந்த போது எதிரே வந்த டிப்பர் லொறியில் கை மோதியதிலேயே இவரது கை துண்டாக்கப்பட்டு வீதியில் வீசப்பட்டுள்ளதாக பெல்மதுளை பொலிஸார் தெரிவித்தனர். லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM