"கோத்­த­பா­யவை ஜனா­தி­ப­தி­யாக்­கினால் முழு­நாடும் கண்ணீர் வடிக்க வேண்டி வரும்"

Published By: Vishnu

04 Jun, 2018 | 08:02 AM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

புதிய அர­சி­ய­ல­மைப்பை அர­சாங்கம் கொண்­டு­வரத் தவ­றி­ய­தா­லேயே நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை இல்­லா­ம­லாக்கும் 20 ஆவது திருத்­தத்தை நாங்கள் கொண்­டு­வந்தோம். நிறை­வேற்று ஜனா­தி­பதி முறைமை இருக்கும் நிலையில் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவை மக்கள் ஜனா­தி­ப­தி­யாக தெரி­வு­செய்தால் முழு நாடும் கண்ணீர் வடிக்­க­வேண்­டிய  நிலை ஏற்­படும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுனில் ஹந்­துன்­னெத்தி தெரி­வித்தார்.

மக்கள் விடு­தலை முன்­னணி பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைத்­தி­ருக்கும் அர­சி­ய­ல­மைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்­பாக நேற்று கொழும்பில் இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

அர­சாங்கம் அதி­கா­ரத்­துக்கு வரும்­போது, புதிய அர­சி­ய­ல­மைப்பு ஏற்­ப­டுத்­து­வ­தா­கவும் அத­னூ­டாக நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை இல்­லா­ம­லாக்­கு­வ­தா­கவும் மக்­க­ளுக்கு வாக்­கு­றுதி அளித்­தி­ருந்­தது. என்­றாலும் கடந்த உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலின் பின்னர் புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான எந்த கலந்­து­ரை­யா­டல்­களும் இடம்­பெ­ற­வில்லை. அத­னால்தான் ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு முன்னர் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை இல்­லா­ம­லாக்கும் நோக்­கத்­துடன் 20ஆவது திருத்­தத்தை நாங்கள் கொண்­டு­வந்தோம்.

அத்­துடன் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை இல்­லா­ம­லாக்­கு­வ­தா­கவே அதி­கா­ரத்­துக்கு வந்த அனைத்து ஜனா­தி­ப­தி­களும் தெரி­வித்­தி­ருந்­தனர். ஆனால் இடம்­பெ­ற­வில்லை. அத­னால்தான் தொடர்ந்தும் அடுத்த ஜனா­தி­பதி தேர்­தல்­வ­ரைக்கும் இதனை வைத்­துக்­கொண்­டி­ருக்­காமல் அடுத்த ஜனா­தி­ப­தி­யாக வரக்­கூ­டி­யவர் நிறை­வேற்று அதி­காரம் இல்­லா­த­வ­ராக தெரி­வு­செய்­யப்­ப­ட­வே­ணடும் என நாங்கள் முயற்­சிக்­கின்றோம். 

அத்­துடன் தற்­போதை ஜனா­தி­ப­தியின் நட­வ­டிக்­கைகள் தொடர்பில் பலரும் விமர்­ச­னங்­களை தெரி­வித்து நாட்­டுக்கு உறு­தி­யான, அச்­ச­மின்றி தீர்­மானம் எடுக்­க­வேண்­டிய தலைவர் ஒருவர் அவ­சியம் என தெரி­விக்­கின்­றனர். அதற்­காக நிறை­வேற்று அதி­காரம் இருக்­க­வேண்டும் என்று தெரி­விக்­கக்­கூ­டி­ய­வர்­களும் இருக்­கின்­றனர். இவ்­வா­றான கருத்து நாட்­டுக்குள் இருக்கும் நிலையில் தற்­போது அடுத்த ஜனா­தி­பதி தேர்­தலில் கோத்­த­பாய ராஜ­பக்ஷ்வை நிய­மிக்­க­வேண்டும் என்ற கருத்தும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இவ்­வா­றான நிலையில் நிறை­வேற்று ஜனா­தி­ப­தி­முறை இருக்கும் நிலையில் மக்கள் கோத்­த­பாய ராஜ­பக்ஷ்வை ஜனா­தி­ப­தி­யாக தெரி­வு­செய்தால் நாட்­டு­மக்கள் அனை­வரும் கண்ணீர் வடிக்க வேண்­டிய நிலையே ஏற்­படும்.

மேலும் நாங்கள் முன்­வைத்­துள்ள 20ஆம் திருத்தம் நாட்டை பிரிக்­கக்­கூ­டி­யது, ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கு அதி­கா­ரத்தை வழங்கும் நோக்­கத்தில் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. மற்றும் 13ஆம் திருத்­தத்தில் ஜனா­தி­ப­திக்கு இருக்கும் அதி­கா­ரத்தை இல்­லா­ம­லாக்­கி­விடும் என்று சிலர் தெரி­வித்து வரு­கின்­றனர். 

ஆனால் அவ்­வா­றான எந்த விட­யமும் இதில் உள்­வாங்­கப்­ப­ட­வி­லிலை. மாறாக பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் விலை­போ­காமல் கட்சி மாறு­வதை தடுத்­துள்ளோம். ஜனா­தி­ப­தியின் பொது மன்­னிப்பில் கைதிகள் விடு­தலை செய்­யப்­ப­டு­வது, ஜனா­தி­பதி கட்சி சார்­பற்­ற­வ­ராக இருப்­பது மற்றும் பாரா­ளு­மன்ற அமர்­வு­களை ஒத்­தி­வைக்கும் அதி­காரம் இல்­லா­ம­லாக்­குதல் போன்ற விட­யங்­களே உள்­வாங்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்­ப­டப்­போ­வ­தில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறைக்கான ஆணையை வலுப்படுத்த...

2025-02-15 17:54:48
news-image

சட்டமா அதிபரின் ஆலோசனையை தற்காலிகமாக இடைநிறுத்துவது...

2025-02-15 20:32:09
news-image

இன்றைய வானிலை

2025-02-16 06:19:25
news-image

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கத்தின்...

2025-02-15 16:38:58
news-image

சிவில் சமூக அமைப்புக்கள் மீதான அழுத்தங்கள்...

2025-02-15 16:38:19
news-image

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்...

2025-02-15 14:38:44
news-image

நிலக்கரி, டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்து...

2025-02-15 16:37:11
news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07