(ரொபட் அன்டனி)
வடக்கு, கிழக்கு தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வை எமது தரப்பினால் மட்டுமே வழங்க முடியும். அதிகாரப்பகிர்வை வலியுறுத்துகின்ற வாசுதேவநாணயக்கார, ராஜா கொல்லுரே, திஸ்ஸவிதாரண போன்றோர் எமது தரப் பிலேயே இருக்கின்றனர் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கின்றார்.
தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண என்ன செய்யவேண்டும் என்பது தொடர்பான ஒரு கலந்துரையாடல் கூட்டு எதிரணியின் தலைவர்கள் மட்டத்தில் முன்னாள் ராஜபக்ஷவின் கொழும்பு இல்லத்தில் நடைபெற்றது. இதில் கருத்து வெளியிடுகையி லேயே மஹிந்த ராஜபக்ஷ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
ஐக்கிய தேசியக்கட்சி அதிகாரப்பகிர்வை ஆதரிக்கவில்லை. ரணில் விக்கிரமசிங்க மட்டும் அதிகாரப்பகிர்வை விரும் பினாலும் ஐக்கிய தேசியக்கட்சியின் அதிகமானோர் அதிகாரப்பகிர்வை விரும்பவில்லை. எனவே ஐக்கிய தேசியக் கட்சி யினால் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு வழங்க முடியாது. ஆனால் எமது தரப்பினால் இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவை காண முடியும்.
அதாவது எமது தரப்பில் அதிகாரப்பகிர்வை வலியுறுத்துகின்ற அதிகமான தலைவர்கள் இருக்கின்றனர். உதாரணமாக திஸ்ஸ விதாரண, வாசுதேவ நாணயக்கார, ராஜா கொல்லுரே போன்ற தலைவர்கள் எம்முடனேயே இருக்கின்றனர்.
எனவே எம்மால் மட்டுமே தேசிய பிரச்சினைக்கான தீர்வை முன்வைக்க முடியும். இதனை தனித்து செய்யவும் முடியாது. எனது ஆட்சிக்காலத்தில் அபிவிருத்தி முக்கியத்துவம் கொடுத்தேன். குறிப்பாக முப்பது வருடகால யுத்தம் முடிவடைந்ததும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதையே நான் நோக்கமாக கொண்டிருந்தேன்.
அதனடிப்படையிலேயே வடக்கு, கிழக்கை நான் அபிவிருத்தி செய்தேன். ஆனால் எம்மால் மட்டுமே தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வை வழங்க முடியும் என்பது உண்மையாகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM