பிணைமுறி மோசடிக்காரர்களுக்கு மஹிந்தவின் ஆட்சியில் தண்டனை - ரஞ்சித் சொய்சா 

Published By: Vishnu

01 Jun, 2018 | 05:03 PM
image

(எம்.சி.நஜிமுதீன்)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் எதிர்காலத்தில் அமையவுள்ள ஆட்சியில் சட்ட திட்டங்களை மாற்றியாவது மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தில் மறைந்திருக்கும் தகவல்களை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுப்போம். மேலும் அம்மோசடியுடன் தொடர்புபட்ட சகலருக்கும் தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் என கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.

 

மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தை மூடி மறைப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் இலஞ்சம் பெற்றமை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஆசியாவிலேயே மிகப்பெரிய மோசடியாக மத்திய வங்கி பிணைமுறி கொடுக்கல் வாங்கலில் இடம்பெற்ற மோசடியே உள்ளது. அதனால் நாட்டின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது. ஆகவேதான் தினந்தோறும் மக்கள் மீது வரிச்சுமை ஏற்றப்படுகிறது. மேலும் குறித்த மோசடியை மூடி மறைப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களில் ஏராளமானோர்களுக்கு இலஞ்சம் வழங்கப்பட்டுள்ளது. 

மோசடியை மூடி மறைப்பதற்கு அதிகளவானோருக்கு இலஞ்சம் வழங்கப்பட்டதன் மூலம் எந்தளவு பெரிய மோசடி இடம்பெற்றுள்ளது என்பதை ஊகித்துக்கொள்ள முடியும். ஊழல் மோசடியை ஒழிப்பதாக கங்கணம் கட்டிக்கொண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கமே மிகப் பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ளது. 

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் சிங்கப்பூரில் உள்ளார். அவரை நாட்டுக்கு கொண்டுவருவதற்கு அரசாங்கம் அக்கறை காட்டுவதாக இல்லை. அவர் அங்கிருப்பதையே அரசாங்கம் விரும்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44