மகிந்தவிற்கு ஹெலிக்கொப்டர் வழங்கியது யார்?

Published By: Rajeeban

01 Jun, 2018 | 03:34 PM
image

2015 ஜனவரி 8ம் திகதி ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்த பின்னர் அவர்  அம்பாந்தோட்டைக்கு செல்வதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  ஹெலிக்கொப்டர் ஏற்பாடு செய்து கொடுத்தார் என ஜனாதிபதி சிறிசேன தெரிவித்திருப்பது உண்மையில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் என கொழும்பு டெலிகிராவ் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் கொழும்பு டெலிகிராவ் மேலும் தெரிவித்துள்ளதாவது:

தேர்தலில் தோற்ற பின்னர் அம்பாந்தோட்டைக்கு செல்வதற்கு மகிந்த ராஜபக்சவே ஹெலிக்கொப்டரை கோரினார் என அவரின் குடும்பத்தவர்களிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சிறிசேன 9 ம் திகதி மாலையே சத்தியப்பிரமாணம்  செய்தார் அதுவரை மகிந்தராஜபக்சவே இந்த நாட்டின் ஜனாதிபதியாக காணப்பட்டார், என தெரிவித்துள்ள ராஜபக்சவிற்கு நெருக்கமான வட்டாரத்தை சேர்ந்தவர்கள் வழமை போன்று அவர் தனது பாதுகாப்பு பிரிவை சேர்ந்த திச விமலசேனவிடம் ஹெலிக்கொப்டரிற்கு உத்தரவிட்டார் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை 2016 ஏப்பிரல் 9 ம் திகதி ஆற்றிய உரையொன்றின் போது மகிந்த ராஜபக்சவிற்கு அம்பாந்தோட்டை செல்வதற்கான ஹெலிக்கொப்டர்களை வழங்கியது நானே என சிறிசேன தெரிவித்துள்ளதையும் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உலகின் எந்த நாட்டிலும் தோல்வியடைந்த ஜனாதிபதி தனது வீட்டிற்கு செல்வதற்கு இரு ஹெலிக்கொப்டர்களை வழங்கியதில்லை என சிறிசேன குறிப்பிட்டிருந்தார் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15