பொலிஸாரின் கண்ணீர்ப் புகைத் தாக்குதலை கண்டித்து இன்று மீண்டும் நாடு பூராகவும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவுள்ளதாக வேலையில்லாப் பட்டதாரிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினரால் கடந்த 16 ஆம் திகதி கொழும்பு புறக்கோட்டையில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. அதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்கும் வகையில் பொலிஸாரினால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
பொலிஸாரின் இந்த தாக்குதலை கண்டித்தே இன்றைய தினம் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு எதிராக அகில இலங்கை வேலையில்லாப் பட்டதாரிகள் சங்கத்தினரால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 16 ஆம் திகதி வேலையில்லா பட்டதாரிகள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் காரணமாக அன்றைய தினம் அதிக வாகன நெரிசல்; ஏற்பட்டு பொதுமக்களும் பயணிகளும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
பொலிஸாரினால் ஏற்கனவே பெற்றுக் கொள்ளப்பட்ட நீதிமன்றத் தடை உத்தரவையும் மீறி அந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM