அஞ்சல் மற்றும் தொலைத்தொடர் ஊழியர்கள் இரு நாள் பணி பகிர்ஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்.
ஜுன் மாதம் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தொடக்கம் இரு நாட்கள் நாடு தழுவிய ரீதியில் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்படபோவதாக அஞ்சல் மற்றும் தொலைத் தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கம் அரசாங்கத்தை எச்சரித்துள்ளது.
ஏழு கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தப்போராட்டம் இடம்பெறவுள்ளதாகவும் அச்சங்கம் அறிவித்துள்ளது.
சங்கம் வெளியிட்டுள்ள வேலை நிறுத்தப் போராட்டப் கோரிக்கைகளில்,
12 வருடங்களாக நிகழும் அஞ்சல் சேவைப் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு வழங்கு, 5 வருடங்கள் கடந்த 2ஆம் வகுப்பு நியமனங்களை உடனடியாக உறுதி செய், கணினி தொழிநுட்பக் கோளாறுகளைச் சீர் செய், ஜனவரி 10ஆம் திகதி வாக்குறுதியளித்த கெபினெட் பத்திரிகைக்கு அனுமதி வழங்கி தீர்வைப் பெற்றுக் கொடு, 2012 பொறுப்புப் பரீட்சையைநடைமுறைப்படுத்து, பொறுப்புக் கொடுப்பனவை உடனடியாக வழங்கு, விரிவுரையாளர் சம்பளத்தை புதிய சம்பளத்துக்கு பெற்றுக் கொடு, பொறுப்புப் பரீட்சையில் சித்தியடைந்த முதலாம் வகுப்பு உத்தியோகத்தர்களுக்கு எம்.என். 7 வேதன மட்டத்தைப் பெற்றுக் கொடு ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தே இந்தப் போராட்டம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தபால் திணைக்கள சேவை தொடர்பான யாப்பை மறுசீரமைத்து நடைமுறைப்படுத்தாமை தபால் திணைக்களத்தில் நீண்டகாலமாக நிலவும் வெற்றிடங்கள் நிரப்பப்படாமை போன்ற இன்னும் பல கோரிக்கைகளை முன்வைத்து ஒருங்கிணைந்த தபால் தொழிற்சங்கங்களின் கூட்மைப்பு ஜூன் 12ஆம் திகதி தொடக்கம் நாடு தழுவிய ரீதியில் தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM