ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தனிடம் தொடர் விசாரணை இடம்பெற்றுள்ளது.
கடந்த சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மதியம் 2. 30 மணி வரையான 5 மணித்தியாலங்கள் பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொலிஸாரால் நான்காம் மாடியில் வைத்து குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பயங்கரவாத புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இவரிடம் மாவீரர் தின கொண்டாட்டம், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், ஜனநாயக போராளிகள் கட்சியின் செயற்பாடு ஆகியன குறித்து பல கேள்விகளையும் கேட்டதுடன் இவரின் வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.
முள்ளிவாய்க்காலில் உயிர் இழந்த உறவுகளை நினைவு கூருவதற்காகவே முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்துவதாக வேந்தன் வாக்குமூலத்தில் தெரிவித்ததுடன் முன்னாள் போராளிகளை ஒன்றிணைத்து ஜனநாயக அரசியலை முன்னெடுப்பதே ஜனநாயக போராளிகள் கட்சியின் நோக்கமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
வேந்தன் பூசா, வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் புனர்வாழ்வளிக்கப்பட்டு, சமுதாயத்தில் கலந்து வாழ விடுவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM