"துப்பாக்கிக்கு பதிலாக வாள்வெட்டு ஆரம்பமாகியுள்ளது"

Published By: Vishnu

28 May, 2018 | 01:44 PM
image

ஊடகவியலாளர்கள் மீது கடந்த காலத்தில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தில்  ஊடகவியலளார்கள் மீது வாள் வெட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் கனகராசா சரவணன் தெரிவித்தார்.

யாழில் ஊடகவியலாளர் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவத்தை கண்டித்து அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நாட்டில் கடந்த 1985 ஆம் ஆண்டு தேவராசா முதல் 2009 ஆம் ஆண்டு சசிமதன் வரை இதுவரை 45 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் பல ஊடக நிறுவனங்கள் மீதும் தாக்குதல் சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட 45 ஊடகவியலாளர்களுள் 36 பேர் தமிழ் ஊடகவியலாளர்கள் ஆவர். எனினும் இவர்களது படுகொலை சம்பந்தமாக இதுவரை எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படாமையானது வேதனை அளிக்கிறது. 

இந் நிலையில் நாட்டில் தற்போது துப்பாக்கிக்கு பதிலாக வாள்வெட்டு மேற்கொள்ள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எனவே யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் மீது இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவம் தொடர்பாக நீதியான விசாரணை ஆரம்பிக்கப்பட்டு சம்மந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11