(இராஜதுரை ஹஷான்)
நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையினை இரத்து செய்ய வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியினர் குறிப்பிடுவதற்கு நியாயமான காரணிகள் ஏதும் கிடையாது என பிவிதுருஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,
மக்கள் விடுதலை முன்னணியினர் தனிநபர் பிரேரணையாக 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினை முன்வைத்துள்ளனர். இத்திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் நடைமுறை அரசியல் நிலைப்பாடுகளுக்கு முரண்பட்டதாகவே காணப்படுகின்றது.
ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் என்பது நாட்டில் குறிப்பாக எமது நாட்டில் சர்வாதிகார ஆட்சியை தடுக்கும் ஆயுதமாகவே இதுவரை காலமும் காணப்பட்டுள்ளது.
20 ஆவது திருத்தத்தின் மூலம் நாட்டில் அரசியல் ரீதியில் எதிர்காலத்தில் எவ்வித மாற்றங்களும் ஏற்படப்போவதில்லை. மாறாக அரசியல் நெருக்கடிகளே தோற்றம் பெறும்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை எதிர்ப்பதற்கான முறையான காரணம் அறியாமலே மக்கள் விடுதலை முன்னணியினர் எதிர்ப்பது வேடிக்கையாக உள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM