விளக்கமறியல் நீடிக்கப்படுகின்றமை சிறப்புரிமையை மீறும் செயல் ; தினேஷ் குணவர்தன 

Published By: Vishnu

25 May, 2018 | 02:22 PM
image

(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

பிணை நிபந்தனையை மீறியமைக்காக  கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட சரத் நிஷாந்தவுக்கு தொடர்ந்தும் பிணை வழங்கப்படாமல் உள்ளது. இது பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறும் செயலாகும் என பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவத்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சரத் நிஷாந்த பிணை நிபந்தனையை மீறியமைக்கும் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவருக்கான  விளக்கமறியலும் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டு வருகின்றது. இது பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறலாகும். 

புத்தளம் மாவட்டம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்  மக்கள் பிரதிநிதியொருவர் சிறைக்குள் தள்ளப்பட்டுள்ளார். ஆகவே இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே சபாநாயகர் இவருக்கு பிணை வழங்க தலையீடு செய்ய வேண்டும் என்றார்.

இதனையடுத்து இதற்கு பதிலளித்து உரையாற்றிய சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்ல,

நீண்ட காலமாக பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த இவர் இப்படி கூறலாமா? சபாநாயகருக்கு பிணை வழங்க முடியாது. பொதுவாக இது நீதிமன்ற விவகாரம் என்பதனால் எமக்கு பாராளுமன்றத்தில் வாதம் செய்யவும் முடியாது. அவரை விடுவிக்க வேண்டுமாயின் நல்ல சட்டதரணியை பிடிக்க வேண்டும். இது நீதிமன்றத்தை அச்சுறுத்தும் செயற்பாடாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02