வலுவான பேரிடர் தயார் நிலை இலங்கைக்கு அவசியம்

Published By: Priyatharshan

23 May, 2018 | 11:33 AM
image

இலங்கையின் இயற்கை அனர்த்த தயார் நிலையை மேலும் வலுப்படுத்துவதற்கு உதவ அவுஸ்திரேலியாவும் ஐ.நா. அமைப்புகளும் முன்வந்துள்ளன.

இயற்கை அனர்த்தத்தை எதிர்கொள்ளும் விடயத்தில் இலங்கைக்கு உதவுவதற்காக அவுஸ்திரேலிய அரசாங்கமும் யுனிசெவ் மற்றும் உலகஉணவு திட்டமும்  ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளன.

இதனடிப்படையில் அவுஸ்திரேலிய அரசாங்கமும் ஐ.நா. அமைப்புகளும் இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்ளும் இலங்கையின் திறனை  வலுப்படுத்துவதற்கான மூன்று வருட திட்டமொன்றினை நடைமுறைப்படுத்தவுள்ளன.

இந்த திட்டத்திற்கு  750,000 அவுஸ்திரேலிய டொலர்களை செலவிடுவதற்கு அவுஸ்திரேலியாவும் ஐ.நா. அமைப்புகளும் இணங்கியுள்ளன.

2004 ஆண்டு சுனாமி இலங்கையை தாக்கியதிலிருந்து அவுஸ்திரேலியா இலங்கையின் பேரிடர் முகாமைத்துவம் மற்றும் அவசரநிலை நடவடிக்கைகளிற்காக உதவி வருகின்றது என இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதரகத்தின் அபிவிருத்தி ஒத்துழைப்பு பிரிவின் தலைவர் விக்டோரியா கோக்லே தெரிவித்துள்ளார்.

இலங்கை இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்வதற்காகவும்,துரித நடவடிக்கைகளை எடுப்பதை உறுதி செய்வதற்காகவும் ஐ.நா.வின் இரு அமைப்புகளுடன் இணைந்து திட்டமொன்றை முன்னெடுப்பது குறித்து மகிழ்ச்சியடைகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு, மட்டக்களப்பு, இரத்தினபுரி, காலி உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படும்  மாவட்டங்களை இலக்குவைத்தே இந்த திட்டத்தினை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவசர நிலையை எதிர்கொள்வதற்கு தயார்நிலையில் இருப்பதை உறுதிசெய்வதிலும், உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கூடிய திறனை வலுப்படுத்துவதிலும் முதலீடு செய்யவேண்டியது அவசியம் என உலக உணவு திட்டத்தின் இலங்கைக்கான பிரதி இயக்குநர் நகுயென் டக் ஹோங் தெரிவித்துள்ளார்.

இயற்கை அனர்த்தங்களின் போது 25000 பேரிற்கு இந்த திட்டத்தின் கீழ்  யுனிசெவ்வும் உலக உணவு திட்டமும் உதவிகளை வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுவர்கள் கர்ப்பிணி தாய்மார்கள் முதியவர்களே இந்த திட்டத்தின் முக்கிய இலக்கு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் யுனிசெவ் ஆற்றும் பணிகளில் சிறுவர்களிற்கே மிக முக்கிய இடத்தை வழங்குகின்றோம் என அந்த அமைப்பின் பிரதிநிதி டிம் சட்டன் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19