இன்றைய திகதியில் முப்பது வயது முதல் நாற்பது வயது வரையுள்ள தெற்காசிய நாட்டவர்கள் கௌட் எனப்படும் மூட்டு வலியினால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. உலகளவில் கடந்த ஐம்பதாண்டுகளில் இத்தகைய மூட்டு வலியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஐம்பது சதவீத அளவிற்கு அதிகரித்திருக்கிறது. ஆனாலும் மக்களிடம் இது குறித்த விழிப்புணர்வு போதிய அளவிற்கு ஏற்படவில்லை.
இரத்தத்தில் யூரிக் அமில படிகங்களின் எண்ணிக்கை குறிப்பிட்ட அளவை விட அதிகமாக இருந்தால் இந்த பாதிப்பு ஏற்படும். இதற்கு மருத்துவர்கள் ஹைப்பர்யூரிக்கேமியா என்று குறிப்பிடுவார்கள். இந்த பாதிப்பு கால் விரல்கள், பெருவிரல் இணைப்பு, கைவிரல்கள், கணுக்கால், கால் மூட்டு என உடலில் எந்த மூட்டுகளிலும் ஏற்படலாம்.
பொதுவாக உடலில் சேரும் யூரிக் அமிலங்கள் மற்றும் அதன் கூறுகள் சிறுநீரகத்தால் வெளியேற்றப்படும். அப்படி வெளியேற்றப்படாத யூரிக் அமில கூறுகள் சிறுசிறு கற்களாகி சிறுநீரகத்தில் தங்கி விடும். ஒரு சிலருக்கு இந்த பாதிப்பு பாரம்பரிய மரபணு கோளாறுகளாலும் ஏற்படலாம்.
இதற்கு மருத்துவர்கள் அதிகளவு தண்ணீரை அருந்துவது தான் சரியான நிவாரணம் என்று அறிவுறுத்துகிறார்கள். தண்ணீர் தான் இந்த யூரிக் அமில கூறுகளை சிறுநீரகத்தின் வழியாக வெளியேற்றுகின்றன. அதே சமயத்தில் புரதச்சத்து அதிகமுள்ள உணவுவகைகள், துரித உணவுகள், மது ஆகியவற்றை முற்றாக தவிர்க்கவேண்டும்.
அதே போல் செர்ரி பழங்களையும், செர்ரி பழச்சாறுகளையும் அருந்துவதால் யூரிக் அமில கூறுகளால் ஏற்படும் பாதிப்பு குறையும். அத்துடன் உடலில் சர்க்கரையின் அளவையும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவேண்டும். இவற்றை பராமரித்தால் கௌட் எனப்படும் மூட்டு வலிகளிலிருந்து விடுபடலாம்.
வைத்தியர் ராஜ்கண்ணா,
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM