இன்னும் பத்து ஆண்டுகளில் உலகளவில் புற்று நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைபவர்களின் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே போல் ஆண்டுதோறும் புற்றுநோயால் பாதிக்கப்படும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் உருவாகி வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புற்று நோயைப் பொறுத்தவரை அதன் அறிகுறிகள் என்பது தொடக்க நிலையில் தெரிவதில்லை. இருபது முதல் முப்பது சதவீதம் பாதிக்கப்பட்டவுடன் தெரியவருகிறது. அதே போல் உணவுக்குழாய் பாதையில் ஏற்படும் புற்று நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
எமது உடலில் உணவுக்குழாய் பாதை அல்லது செரிமான பாதை என்பது உணவுக்குழாயிலிருந்து தொடங்கி மலத்துவாரம் வரை அமைந்துள்ளது. இதில் கல்லீரல், கணையம், மண்ணீரல் போன்ற உறுப்புகளும் இடம் பெறுகிறது. செரிமான பாதையில் ஏற்படும் புற்றுநோய்க்கு பிரத்யேக அறிகுறிகள் எதுவும் கிடையாது. கணையப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீராத முதுகு வலி காணப்படும். மதுப் பழக்கமுடையவர்களையே இது அதிகம் பாதிக்கும்.
செரிமான புற்றுநோய் வராமலிருக்கவேண்டுமானால் புளிப்புத்தன்மையுள்ள எலுமிச்சை, ஓரஞ்சு பழங்களை அதிக அளவில் உட்கொள்ளவேண்டும். நார்ச்சத்துள்ள உணவுகளையும் காலை மாலை என இரண்டு வேளைகளிலும் உட்கொள்ளவேண்டும். புகைப்பிடித்தல், மது அருந்துதல், பொரித்த உணவுகள், துரித உணவுகள், உப்பு அதிகமுள்ள உணவுகள் ஆகியவற்றைத் தவிர்க்கவேண்டும்.
வைத்தியர் அஸ்மா
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM