(எம்.எப்.எம்.பஸீர்)
பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீனின் படுகொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சி.சி.ரி.வி.கண்காணிப்பு கமரா பதிவுகளை வெளி நாட்டு ஆய்வுகளுக்கு அனுப்புவது குறித்த மதிப்பீட்டு நடவடிக்கைகள் துரிதமாக இடம்பெற்று வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்காக குறித்த சீ.சீ.ரி.வி. கண்காணிப்பு கமரா ஒளிப் பதிவுகளை அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட பல முன்னணி நாடுகளின் ஆய்வகங்களிடமிருந்து மதிப்பீட்டு அறிக்கைகள் கோரப்ப்ட்டுள்ளதாகவும் அதனை மையப்படுத்தி எடுக்கப்படும் தீர்மானத்துக்கு அமைவாக எந்த ஆய்வகத்துக்கு அனுப்புவது என முடிவெடுக்கப்ப்ட்டு அங்கு மிக விரைவில் அந்த வீடியோ ஆதாரங்கள் அனுப்படும் என அந்த தகவல்கள் தெரிவித்தன.
வசீம் தாஜுத்தீன் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் வாகனமொன்றில் பயணிப்பது சி.சி.ரி.வி. கமெராவில் பதிவாகியுள்ளது. ஆயினும், அந்தக் காட்சி தெளிவின்மை காரணமாக, வசீம் தாஜுதீன் பயணித்த வாகனத்தினை அடையாளம் காண முடியாமல் உள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, குறித்த காட்சிகள் அடங்கிய இறுவட்டுக்களை ஆழமான ஆய்வுகளுக்காக வெளிநாட்டு தடயவியல் பரிசோதனை கூடங்களுக்கு அனுப்பி வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் – குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கடந்த ஜனவரி மாதம் 07 ஆம் திகதி உத்தரவு வழங்கினார்.
ஆயினும், இதுவரை குறித்த இறுவட்டுக்கள் வெளிநாட்டு பரிசோதனைகளுக்கு அனுப்பப்படாமல், நீதிமன்றத்திலேயே வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே, நீதிமன்ற உத்தரவுக்கிணங்க கொழும்பு பல்கலைக்கழக கணிணிப் பிரிவினரிடம், குறித்த காட்சிகள் பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டிருந்தன. ஆயினும், அந்தக் காட்சிகள் தெளிவற்றவையாக உள்ளமையினால், அவற்றில் பதிவாகியுள்ள வாகனத்தை அடையாளம் காண முடியவில்லையென, கொழும்பு பல்கலைக்கழக கணிணிப் பிரிவு தெரிவித்திருந்தது.
இதேவேளை, மேற்படி காட்சிகளை ஆழமான பரிசோதனைகளுக்காக வெளிநாட்டுப் புலனாய்வு நிறுவனங்களான எப்.பி.ஐ. அல்லது ஸ்கொட்லான் யாட் பொலிஸாரின் ஆய்வுகூடங்களுக்கு அனுப்பி வைக்குமாறு, கொழும்பு பல்கலைக்கழக கணிணிப் பிரிவினர் சிபாரிசு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM