இலங்கை வான்பரப்பில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள கூகுள் நிறுவனத்தால் அனுப்பப்பட்ட அதிவேக இணைய வசதிகளை பெற்றுக்கொடுக்கும் கூகுள் பலூன் உடைந்து விழவில்லை எனவும் பரீட்சார்த்த நடவடிக்கைகள் பூர்த்தியான பின்னரே வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாகவும் கூகுள் நிறுவனத்துடன் தொடர்புபட்ட பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இணைய சேவையை வழங்கும் கூகுள் பலூன் எனப்படும் இராட்சத வாயு பலூன் கல்ஹா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புப்புரஸ்ஸ, டெல்டா தோட்டம் - டேசன் பிரிவு முதலாம் இலக்க தேயிலை தோட்டத்தில் நேற்று மாலை 7.30 மணியளவில் விழுந்துள்ளது.
இந்த பலூனை மீட்ட பொலிஸார் தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில் நுட்ப அதிகாரிகளிடம் கையளித்தனர்.
எனினும் குறித்த பலூன் பரீட்சார்த்த நடவடிக்கைகள் நிறைவுக்கு வந்த பின்னரே தரையிறக்கப்பட்டதாக கூகுள் பொறியியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதேவேளை இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள, இந்த திட்டத்துக்கு பொறுப்பான நவீன தொலை தொடர்பு டிஜிட்டல் அடிப்படை வசதி தொடர்பிலான அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ, இலங்கையின் வான் சட்ட திட்டங்களுக்கு அமைவாகவே இந்த கூகுள் பலூன் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM