இலங்கை புறக்கணித்தால் சர்வதேச வழக்கின் மூலம் உரியதீர்வு பெறப்படும் - ஜஸ்மின் சூக்கா 

Published By: Priyatharshan

16 May, 2018 | 05:07 AM
image

(ரி.விரூஷன்)

காணாமல்போனோர் விடயத்தில் இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியான புறக்கணிப்பு போக்கை கடைப்பிடிக்குமானால் இலங்கைக்கு எதிராக சர்வதேசத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்வதன் மூலம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுப்போம் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர்  ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.   

வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரனது அலுவலகத்தில் காணாமற்போனவர்களின் உறவினர்களுடன் ஸ்கைப் மூலம் ஜஸ்மின் சூக்கா மேற்கொண்ட உரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி வேறு வழியில்லாமல் இராணுவத்திடம் சரணடைந்த 280 பேரின் பெயர்களும் புகைப்படங்களும் அவர்கள்  தொடர்பான விபரங்களும் ITJP என்ற இணையத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையில் காணாமல்போனோர் அலுவலகம் தனது விசாரணைகளை ஆரம்பிக்கும்‍போது இவர்களின் நிலைப்பாடு குறித்தும் கவனத்திற்கொள்ள வேண்டும் என நாம் காணாமல் போனோர் அலுவலத்தின் தலைவருக்கு  கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளோம். 

அத்துடன் காணாமல்போனோரின் உறவுகளின் சாட்சியங்களை நாம் பெறும்போது அவர்களின் பாதுகாப்பு தொடர்பிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

காணாமல்போனோர் விடயத்தில் இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியான புறக்கணிப்பு போக்கை கடைப்பிடிக்குமானால் இலங்கைக்கு எதிராக சர்வதேசத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்வதன் மூலம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுப்போம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58