மைத்திரி தலைமையில் சுதந்திரக்கட்சி அரசாங்கம் அமைக்கப்படும் - மஹிந்த அமரவீர

Published By: Priyatharshan

14 May, 2018 | 05:34 AM
image

ஐக்கிய தேசியக் கட்சியுடனோ அல்லது வேறு எந்த அணியுடனோ இணைந்து அடுத்த ஆட்சியை அமைக்கப் போவதில்லை. மாறாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையின் கீழ் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கமே அமைக்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அரச நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில். 

சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் மனங்களை வெற்றிகொண்ட தலைவர் என்ற அடிப்படையில்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மாத்திரமே ஜனநாயக ஆட்சியினை முன்னெடுத்து செல்ல முடியும்.

தேசிய அரசாங்கத்தில் இருந்து வெளியேறியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 உறுப்பினர்களும் வேறு எந்தக் கட்சியுடனும் இணைந்து செயற்படப்  போவதில்லை. அவர்கள் தொடர்ந்தும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்தே தீர்மானங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் எமக்கு உறுதியளித்துள்ளனர். 

நாம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படவுள்ளதாக கூறுகின்றனர். ஆனால் நாம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைத்துவத்தின் கீழ் இத்தனை காலமாக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டும்  வருகின்றோம். ஒரே கொள்கையில் இத்தனை காலமாக செயற்பட்ட காரணத்தினால் தான் மக்கள் எம்மை ஆதரித்து வருகின்றனர். 

ஆகவே இனியும் அரசியல் இலாபங்களுக்காக நாம் கட்சி மாற வேண்டும் என்ற நிலைப்பாடு ஏற்படப்போவதில்லை. நாம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையவும் மாட்டோம் அதேபோல் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இணையவும் மாட்டோம். நாம் இறுதி வரையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியாகவே செயற்படுவோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31