(லியோ நிரோஷ தர்ஷன்)
உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு எதிர்வரும் வியாழக்கிழமை அமெரிக்காவுக்கு செல்லவுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இதன்போது ஜெனிவா தீர்மானத்திற்கு அமைவான சர்வதேச பொறுப்புக்கூறலின் தேசிய பொறிமுறை நகலையும் எடுத்துச் செல்லவுள்ளார்.
இதன் போது அமெரிக்கா இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி மற்றும் தெற்காசிய விவகாரங்களுக்கான துனை இராஜகாங்க செயலாளர் நிஷா பிஷ்வால் உள்ளிட்டவர்களை வெளிவிவாகார அமைச்சர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இதேவேளை வாஷிங்டனில் அமைந்துள்ள சமாதானத்திற்கான அமெரிக்க நிறுவனத்தில் இலங்கை தொடர்பில் விஷேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இதில் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் பின்னரான 6 வருடங்களின் நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி என்ற தலைப்பில் விஷேட உரையை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நிகழ்த்தவுள்ளார். அத்துடன் இந்த நிகழ்வில் தெற்காசிய விவகாரங்களுக்கான துணை இராஜாங்க செயலாளர் நிஷா பிஷ்வால் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM