(நெவில் அன்தனி)
கோலாலம்பூரில் நடைபெற்றுவரும் மலேசிய பகிரங்க மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கையின் வினோஜ் சுரஞ்சய டி சில்வா, காலிங்க குமார ஆகியோர் தங்கப் பதக்கங்களையும் ருமேஷிக்கா ரத்நாயக்க வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளனர்.

ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 10.27 செக்கன்களில் நிறைவு செய்த வினோஜ் சுரஞ்சய டி சில்வா தனது தனிப்பட்ட சிறந்த நேரப் பெறுதியுடன் தங்கப் பதக்கத்தை வென்றார்.
ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய காலிங்க குமாரகே, அப் போட்டியை 46.00 செக்கன்களில் நிறைவு செய்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 11.76 செக்கன்களில் நிறைவு செய்த ருமேஷிக்கா ரத்நாயக்க வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
இவர்கள் மூவரும் ஜகார்த்தாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழாவில் பதக்கம் பெறக்கூடியவர்கள் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM