வவுனியா சிறைச்சாலையில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருடைய கைபேசியை குரங்கு ஒன்று பரித்து சேதப்படுத்தியுள்ள சம்பவ இடம்பெற்றுள்ளது.
நேற்று காலை சிறைக்குவரும் பொதுமக்களின் விபரங்களை பதிவு மேற்கொள்ளும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருடைய கைபேசியே குரங்கு பரித்து கொண்டு மரத்தில் ஏறியுள்ளது.
குறித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் குரங்கை பின் தொடர்ந்து கல் ஒன்றினை குரங்கினை நோக்கி எறிந்தபோது குரங்கு கைபேசியின் கவரின் பகுதியை கீழே போட்டுள்ளது.
குறித்த குரங்கின் மீது மீண்டும் ஒரு கல்லினை எறிந்தபோது பற்றறியை கீழே போட்டுள்ளது. இதையடுத்து வாழைப்பழம் ஒன்றினை குரங்கை நோக்கி வீசியபோது கைபேசியை கீழே போட்டு விட்டு வாழைப்பழத்தைப் பெற்றுக்கொண்டு குரங்கு சென்றுவிட்டதா வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மரத்திலிருந்து கீழே வீழ்ந்த கைபேசியானது கடுமையாக சேதமடைந்துள்ளதுடன் பாவனை செய்ய முடியாத நிலையிலுள்ளது.
இவ்வாறு குரங்குகளின் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது இதனைக்கட்டுப்படுத்தவதற்கு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும் நடைமுறைப்படுத்த முடிவதில்லை இதனால் பல இழப்புக்களையும் சந்திக்க நேர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM