வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரான் பிரதேசத்தில் இளவயதுத் திருமணம் நடைபெறுவதற்கு உடந்தையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டில் தாயார் பொலிஸாரினால் விசாரிக்கப்பட்டு வருவதோடு, இளம் பெண்ணை திருமணம் முடித்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
கிரான், பொன்டுகள் சேனை பகுதியில் வசிக்கும் தரம் 8இல் கல்வி பயிலும் 15 வயது நிரம்பிய மாணவியை தகப்பன் இல்லாத காரணத்தினாலும், தனது மகளை பராமரிக்க முடியாத வறுமை சூழலினாலும் குறித்த சிறுமியின் தாயார் அதேபகுதியைச் சேர்ந்த 17வயது சிறுவன் ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.
இதனைக் குற்றமென அறிந்து கொண்ட அப்பிரதேசத்தை சேர்ந்த கிராம சேவக உத்தியோகத்தர் பொலிஸாருக்கு வழங்கிய இரகசிய தகவலையடுத்து, குறித்த தாயார் பொலிஸாரினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டதோடு மணம் முடித்த இளங்கணவனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாரினால் மீட்கப்பட்ட சிறுமி வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வைத்திய பரிசோதனை அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM