இலங்கை அணி மேற்கிந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அவ்வணியுடன் 3 போட்டிகளைக்கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது.
இந்நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இடம்பெறவுள்ள மூன்று போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடருக்கான 17 பேர் கொண்ட இலங்கை குழாமை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
மேற்கிந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை டெஸ்ட் குழாமுக்கு தினேஸ் சந்திமல் தலைமை தாங்குகிறார்.
இதேவேளை, மஹேல உடவத்த மற்றும் கசுன் ராஜித ஆகியோர் மீண்டும் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர் இம்மாதம் 26 ஆம் திகதி முதல் எதிர்வரும் ஜூன் மாதம் 28 ஆம் திகதி வரை மேற்கிந்திய தீவுகளில் இடம்பெறவுள்ளது.
இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவால் பெயரிடப்பட்டுள்ள குழாமிற்கு விளையாட்டுத்துறை அமைச்சரின் ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் சுரங்க லக்மால் ஆகியோருக்கு உடற்தகுதி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டிய நிலையிலுள்ளனர்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக விளையாடவுள்ள இலங்கை டெஸ்ட் குழாமில் பெயரிடப்பட்டுள்ள வீரர்களின் பெயர் விபரங்கள் வருமாறு,
தினேஸ் சந்திமால் (தலைவர்), மஹேல உடவத்த, குசல் மெண்டிஸ்,டிகுசல் ஜனித் பெரேரா, தனஞ்சய டீ சில்வா, ரொஷேன் சில்வா, அஞ்சலோ மெத்தியூஸ், நிரோசன் டிக்வெல்ல, ரங்கன ஹேரத், தில்ருவன் பெரேரா, அகில தனஞ்சய, ஜெப்ரி வென்டர்ச, லஹிரு கமகே, கசுன் ராஜித, சுரங்க லக்மால், லஹிரு குமார, அசித பெர்ணான்டோ.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM