உணவு ஒவ்வாமை : 25 மாணவர்கள் வைத்தியசாலையில்

Published By: Robert

18 Feb, 2016 | 01:51 PM
image

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பொகவந்தலாவ டின்சின் தமிழ் மகா வித்தியாளயத்தைச் சேர்ந்த 25 மாணவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று பிற்பகல் 12.30 மணி அளவில் இடம் பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த வித்தியாளயத்தில் கல்வி கற்கும் தரம் 04 மற்றும் தரம் 05ஜ சேர்ந்த மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மதியம் மாணவர்களுக்கு வழங்கபட்ட பாற்சோற்றை மாணவர்கள் உட்கொண்ட பின்னரே தலைசுத்து மற்றும் வாந்தி என்பன ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட மாணவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்புகள் எதுவும் இல்லையென பொகவந்தலாவ வைத்தியசாலையின் வைத்திய பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் சுகாதார பரிசோதகர் மற்றும் பொகவந்தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பொகவந்தலாவ நிருபர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38