தங்க நகைகள் எனக் கூறி போலி நகைகளை அடகு நிலையங்களில் அடகு வைத்து பணம் சம்பாதித்து வந்த 'ரஜா குழு' என அறியப்படும் ஐந்து பேர் கொண்ட குழுவொன்றினை வெள்ளவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வெள்ளவத்தை பகுதியில் அடகு நிலையங்களில் போலி தங்க நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுவருவதாக பொலிஸாருக்கு கிடைத்த பல முறைப்பாடுகளை மையப்படுத்தி இடம்பெற்று வந்த விசாரணைகளின் போது, ஓர் அடகு நிலையத்துக்கு சந்தேக நபர்களில் இருவர் வந்த போது, அடகு நிலைய உரிமையாளர் கொடுத்த தகவலின் பிரகாரம் சந்தேக நபர்களைக் கைது செய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
அவ்விருவரிடமும் முன்னெடுத்த விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைய இக்குழுவை வழி நடாத்திய 32 வயதான ரஜா என அறியப்படும் நாகவில்லு, பாலாவி - புத்தளம் எனும் முகவரியைச் சேர்ந்த ஒருவரை கைது செய்ததாகவும் அவருக்கு போலி நகைகளை செய்துகொடுக்கும் கல்முனை சேர்ந்தவரும் தற்போது கொழும்பில் வசித்து வருவபருமான நகை வடிவமைப்பாளரான மற்றொருவரையும் கைது செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந் நிலையில் சந்தேக நபர்களிடம் முன்னெடுத்துள்ள விசாரணைகளில் இவ்வாறு அடகு வைக்கப்பட்ட போலி நகைகள் தொடர்பிலான 52 பற்றுச் சீட்டுக்களை மீட்டுள்ளதாகவும், 46 வளையல்கள், இரு மோதிரங்கள் மற்றும் 4 சங்கிலிகள் இவ்வாறு அடகு வைக்கப்பட்ட ஆபரணங்களில் அடங்குவதாகவும் இதனூடாக 46 இலட்சத்து 94 ஆயிரத்து 649 ரூபா பணத்தை சந்தேக நபர்கள் சம்பாதித்துள்ளதாகவும் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்ததாவது,
"தங்க நகை எனக் கூறி வெள்ளவத்தை பகுதியில் உள்ள சில அடகு நிலையங்களில் போலி தங்க நகைகள் அடகு வைக்கப்பட்டு பணம் பெறப்பட்டுள்ளமை தொடர்பில் முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றிருந்தன. அது தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கபில ஜயமான்னவின் ஆலோசனைக்கு அமைய குற்றவியல் குழு விசாரணைகளை நடாத்தியது.
இந் நிலையில் கடந்த 5ஆம் திகதி வெள்ளவத்தையில் உள்ள அடகு நிலையம் ஒன்றுக்கு மோதிரங்கள் இரண்டை அடகு வைக்க தம்பதிகளாக தம்மை அடையாளப்படுத்தும் ஆண், பெண் இருவர் வந்துள்ளனர். அவர்களின் நகையில் சந்தேகம் கொண்ட அடகுக் கடை உரிமையாளர் அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கவே அங்கு சென்ற பொலிஸார் அவ்விருவரையும் கைது செய்தனர்.
37 வயதான புத்தளம் பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவரும் மற்றும் பொரளையைச் சேர்ந்த 42 வயதான பெண் ஒருவருமே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து அவர்களிடம் முன்னெடுத்த விசாரணைகளில் இந்த நடவடிக்கையின் பிரதான சந்தேக நபரான ரஜா என்பவரையும் மேலும் இருவரையும் பொலிஸார் கைது செய்தனர். புத்தளத்தை சேர்ந்த 54 வயதுடைய இருவரும் கல்முனையைச் சேர்ந்த 28 வயதான தற்போது கொழும்பில் நகை தயார் செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ள மற்றொருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த குழுவை ரஜாவே வழி நடத்தியுள்ள நிலையில் நகை தயாரிக்கும் தொழில் ஈடுபட்டு வந்த நபர் அடகு வைப்பதற்கான போலி நகைகளை தயார் செய்து கொடுத்துள்ளார். வெள்ளி, தங்கம் கலந்து அவர் இதனை தயார் செய்துள்ளார். நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம், வெல்லம்பிட்டி, நுவரெலியா, ஜா- எல, மருதானை, ஆனமடுவ மற்றும் வெள்ளவத்தை உள்ளிட்ட 17 பொலிஸ் பிரிவுகளில் உள்ள அடகு நிலையங்களில் இவ்வாறான ஜபோலி நகைகள் அடகு வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் சந்தேக நபர்களைக் கைது செய்யும் போது அடகு வைக்க தயார் நிலையில் இருந்த 6 மோதிரங்கள் 6 வலையல்கள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றினர். அத்துடன் தங்கம், வெள்ளித் துண்டுகள், 3 இலட்சத்து 54 ஆயிரத்து 620 ரூபா பணம் ஆகியவற்றையும் பொலிஸார் கைப்பற்றினர்.
பொலிஸாரின் விசாரணையில் இக்குழு அடகு வைத்த 52 பற்றுச் சீட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அடகு வைத்து இவர்களால் 46 இலட்சத்து 94 ஆயிரத்து 649 ரூபா பணம் சம்பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் விசாரணை தொடர்கின்றன. சந்தேக நபர்கள் ஐவரும் எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறயலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM