வாகரையில் இராணுவ வீரர் தற்கொலை!!!

Published By: Digital Desk 7

09 May, 2018 | 10:46 AM
image

மட்டக்களப்பு - வாகரை பிரதேசம், பணிச்சங்கேணி 18 ஆவது இராணுவ படைப்பிரிவில் கடமையாற்றி வந்த இராணுவ வீரர்  ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியினால் சுட்டு தற்கொலை செய்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தானை பிரதேசத்தினை சேர்ந்த 24 வயதான வீ.எம்.என். சஞ்ஜீவ  என்ற இராணுவ வீரரே  இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வழமைக்கு மாறாக இன்று  அதிகாலை இராணுவ முகாமில் துப்பாக்கி சத்தம் கேட்டதனையடுத்து சக இராணுவ வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது குறித்த இராணுவ வீரர் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டுள்ளார்.

உடனடியாக இரத்த வெள்ளத்தில் கிடந்த இராணுவ வீரரை மீட்டு வாகரை பிரதேச வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்த போதிலும் குறித்த இரணுவ வீரரின் உயிரை காப்பாற்ற முடியாது போயுள்ளது.

தற்போது சடலம் வாகரை பிரதேச வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் வாகரை பொலிஸார்  தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47