அமெரிக்க கப்பலில் வந்த இரு  யுவதிகள் மீது பாலியல் தொல்லை : விடுதி ஊழியர் கைது 

Published By: Priyatharshan

08 May, 2018 | 11:03 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுற்றுலா வீடுதியொன்றில் அமெரிக்க யுவதிகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த  விடுதியின் ஊழியர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

2018 பசுபிக் பங்காண்மை நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நிமித்தம் யூ.எஸ்.என்.எஸ். மேர்சி எனும் அமெரிக்க கடற்படை வைத்தியசாலை கப்பலில் வந்த இரு அமெரிக்க யுவதிகள் தமக்கு கிடைத்த ஓய்வு நேரத்தில் உப்புவெளி பகுதியிலுள்ள சுற்றுலா விடுதி ஒன்றுக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் தங்கியிருந்தவாறு தமக்கு மென்பானம் கொண்டு வந்து தருமாறு விடுதியின் சேவையாளரிடம் தெரிவித்தனர்.

இதன்போது மென்பானத்துடன் குறித்த அறைக்கு சென்ற ஊழியர் அங்கு தனிமையிலிருந்த யுவதிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்த முயற்சித்துள்ளார். 

இச் சம்பவத்தை அந்த யுவதிகள் இருவரும் பொலிஸாரிடம் முறையிட்டதையடுத்து பொலிஸார் குறித்த இளைஞரை கைது செய்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30