மின்சார பொறியியலாளர் சங்கம் எச்சரிக்கை !

Published By: Priyatharshan

08 May, 2018 | 10:21 PM
image

(இராஜதுரை ஹஷான்)

மின்சார சபை பொறியியலாளர்கள்  தயாரித்த சூத்திரத்தை எதிர்வரும் இரண்டு வார காலத்திற்குள் நடைமுறைப்படுத்தாவிடின் பொறியியலாளர்கள் சங்கத்தின் மேற்கொண்டுள்ள வரையறுக்கப்பட்ட வேலை, வேலை நிறுத்தப் போராட்டமாக மாற்றமடையலாம் என மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு தெரிவித்தார்.

அவர் இது தொடர்பாக மேலும் குறிப்பிடுகையில்,

மின்சார சபை பொறியியலார்கள் தயாரித்த குறைந்த செலவில் நீண்டகால மின்சார சூத்திரத்திற்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்காமையின் காரணமாக இன்று முதல் வரையறுக்கப்பட்ட கடமையில் மின்சார சபை பொறியியலாளர்கள் ஈடுபட்டனர்.  

போராட்டம், மின்சாரம், பொறியியலாளர் சங்கம், மின்சார சபை

மின்சார சபை பொறியியலாளர்கள்  தயாரித்த இந்த சூத்திரத்தை எதிர்வரும் இரண்டு வாரத்திற்குள் நடைமுறைப்படுத்தாவிடின் பொறியியலாளர்கள் சங்கத்தின் மேற்கொண்டுள்ள வரையறுக்கப்பட்ட வேலை, வேலை நிறுத்தப் போராட்டமாக மாற்றமடையலாம். 

குறைந்த விலை சூத்திரங்களை பெற்றுத்தரக்கூடிய அனல் மின் நிலையங்களை உருவாக்குவதுடன் தற்போது காணப்படுகின்ற நுரைச்சோலை அனல்மின்னிலையம் தவிர ஏனைய அனல் மின்னிலையங்களை மீள்திருத்தம் செய்வது தற்போது அதிகரித்துள்ள மின்சார பாவனையின் கேள்விகளுக்கு தீர்வாக அமையும்.

20 வருட நீண்ட கால தேவையினை கருத்திற் கொண்டு நாங்கள் தயாரித்த   திட்டங்களை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு நிராகரித்துள்ளது. அரசாங்கத்திடம் இவ்விடயம் தொடர்பில் கடந்த 3 வருட காலமாக கோரிக்கை விடுத்தும் இதுவரை காலமும் எவவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

அதேவேளை எமது இந்த போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு  மின்சார சபையின்  பணியாளர்கள் சங்கம் முன்வந்துள்ளனர் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50