தகவல் அறியும் சட்டத்தின் மூலத்தின் ஊடாக நாட்டின் ஜனநாயகத்தை பேண முடியும் - நோர்வே தூதுவர்

Published By: Priyatharshan

08 May, 2018 | 04:36 PM
image

(இரோஷா வேலு)

தகவல் அறியும் சட்டம் மூலமானது நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதோடு அரசுக்கும் பிரஜைகளுக்குமிடையில் ஓர் உறவை பேண உதவும் பலமாகவும் காணப்படுகின்றது என நோர்வே நாட்டின் தூதுவர் எச்.ஈ.தொர்ப்ஜேர்ன் கெளஸ்தாஸ்தர் தெரிவித்துள்ளார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் இலங்கையில் அமுல்படுத்தப்பட்டு ஒரு வருட கால பூர்த்தியை முன்னிட்டு  தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பான சர்வதேச மாநாடு கொழும்பில் அமைந்துள்ள கொள்கை ஆய்வு நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த வியாழக்கிழமை பத்திரிகை சுதந்திர தினத்தை கொண்டாடிய நாம் இன்றும் நாளையும் தகவலறியும் உரிமைச் சட்டம் தொடர்பான மாநாட்டை நடத்துவது என்பது சிறந்தவொரு நிகழ்வாகும். 

இம்மாநாட்டின் மூலம் பல நாடுகளில் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் நிலைப்பாடு குறித்து நாம் ஒப்பீடு செய்து அறிந்து கொள்ள முடியும். அந்த வகையில் இலங்கையில் 2016 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்தின் அடிப்படையில் 2017 ஆம் ஆண்டு தகவல் அறியும் சட்டமூலம் அமுலுக்கு கொண்டு வரப்பட்டது. 

இதன் மூலம் நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த முடிவதுடன் அரசுக்கும் பிரஜைகளுக்குமிடையில் ஓர் உறவை பேண உதவும் பலமாகவும் இச் சட்டமூலம் காணப்படுகிறது. 

மேலும் இச்சட்டத்தின் மூலம் அரசாங்கம் மற்றும் அரச நிறுவனங்களின் பொறுப்பு கூறல் உறுதிப்படுத்தப்படுவதுடன் நாட்டின் பல்வேறு மட்டங்களில் இடம்பெறும் ஊழல்களை வெளிப்படுத்தவும்  இச் சட்டம் உதவ கூடும். 

இதுவரையில் 118 நாடுகள் இச் சட்டத்தை உள்வாங்கி தங்கள் பிரஜைகளும் இவ்வுரிமையை அனுபவிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளன . சிவில் சமூகம், ஊடகங்கள் மற்றும் பொது மக்கள் இதனை முழுமையாக பயன்படுத்திக் கொள்வதன் மூலம் தகவலறியும் உரிமைச் சட்ட மூலத்தின் முழுமையான பலனை அடைந்து கொள்ள முடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுகாதாரத்துறை சார் ஊழியர்களுக்கான பணியிடமாற்றத்துக்கு நிறைவுகாண்...

2025-02-07 20:16:30
news-image

ஒரு சில தமிழ், முஸ்லிம் தலைவர்கள்...

2025-02-07 20:22:35
news-image

இன்றைய வானிலை

2025-02-08 06:05:17
news-image

புளியங்குளத்தில் மின்சாரம் தாக்கி 6 வயது...

2025-02-08 02:19:36
news-image

வவுனியாவில் முச்சக்கர வண்டியின் மேலதிக பாகங்களுக்கு...

2025-02-08 01:58:23
news-image

மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவிக்க...

2025-02-07 20:28:48
news-image

தொண்டைமனாறு வெளிக்கள நிலையத்தின் நிர்வாகத்தினருக்கும், வடக்கு...

2025-02-08 02:10:13
news-image

மலையக மக்களை 'மலையகத் தமிழர்கள்" என...

2025-02-07 20:05:32
news-image

மலையக மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை...

2025-02-07 21:18:41
news-image

கொவிட் தொற்றில் உயிரிழந்தவர்களை தகனம் செய்யும்...

2025-02-07 14:49:21
news-image

மின்சார சபையின் பொறியியலாளர் சங்கமே பிரதான...

2025-02-07 14:15:46
news-image

மலையகத்தில் கல்வி, வீடமைப்பு , வீதி...

2025-02-07 20:25:59