வங்கி கணக்காளரான பெண் கேகாலையில் கைது !  

Published By: Priyatharshan

21 Apr, 2018 | 08:09 AM
image

பண மோசடியில் ஈடுபட்ட வங்கி ஒன்றில் கடமையாற்றிய பெண் கணக்காளர் ஒருவர்  கேகாலையில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கம்பஹா பிரதேசத்திலுள்ள வங்கி ஒன்றில் கணக்காளராக பணியாற்றிய குறித்த பெண் அதே வங்கியில் 2 கோடியே 29 இலட்சத்து 41 ஆயிரத்து 349 ரூபாவை ரூபா நிதி மோசடியில் ஈடுபட்டுள்ள சந்தேகத்தின் பேரிலேயே பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

இவ்வாறு நேற்றுக் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரான குறித்த பெண் கணக்காளர் கடந்த 18 ஆம் திகதி டுபாயில் இருந்து நாடு திரும்பும் போது கட்டுநயாக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இருப்பினும் கைதுசெய்யப்பட்ட குறித்த பெண் அங்கிருந்து அன்றையதினமே தப்பிச் சென்றுள்ளார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில்  குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில், சந்தேக நபரான பெண் இருந்த பிரதேசம் அடையாளம் காணப்பட்டு  அவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

கம்பஹா – திமுது மாவத்தை பகுதியை சேர்ந்த 36 வயதான பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் கைதுசெய்யப்பட்ட பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58