ஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடரை இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் பங்கேற்கும் ஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடரை இவ்வருட இறுதியில் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இந்தியா –பாகிஸ்தான் இடையே சுமுகமான உறவு இல்லாததால், நடத்தப்படாமல் உள்ளன. இதன் காரணமாக இந்தியா வருவதற்கு பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்தது.
இந்நிலையில் இத் தொடரை இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டது. இலங்கை கிரிக்கெட் நிறுவனமும் இதற்கு சம்மதம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இதுதொடர்பாக தீர்மானிக்கும் ஆசிய கிரிக்கெட் சபைக் கூட்டம் மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்றது. இதில் ஆசிய கிண்ணத் தொடரை இந்தியாவுக்கு பதிலாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்துவது என ஏகமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 13 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை டுபாய் மற்றும் அபுதாபியில் இப்போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இதில் மத்திய அரசின் அனுமதி கிடைத்தால் மட்டுமே பாகிஸ்தானுடன் இந்திய அணி மோதும் என்று இந்திய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM