68 வரு­டங்­களின் பின்னர் இலங்கை வென்ற பதக்கம்

Published By: Robert

11 Apr, 2018 | 10:43 AM
image

(அவுஸ்­தி­ரே­லி­யாவின் கோல்ட்­கோஸ்­டி­லி­ருந்து    எஸ்.ஜே.பிரசாத்)

பொது­ந­ல­வாய விளை­யாட்டு விழா வர­லாற்றில் 68 ஆண்­டு­க­ளுக்குப் பிறகு இலங்கை ஆண்கள் பிரிவில் திவங்க ரண­சிங்க அரை­யி­றுதிச் சுற்­றுக்கு முன்­னேறி பதக்கம் ஒன்றை உறு­தி­செய்­துள்ளார். தற்­போ­துள்ள நில­வ­ரப்­படி திவங்க அரை­யி­று­தியில் வெற்­றி­பெற்றால் தங்­கப்­ப­தக்­கத்­திற்­காக போட்­டி­யி­டுவார். ஒரு­வேளை தோல்­வி­யுறும் பட்­சத்தில் இலங்கை ஒரு வெண்­கலப் பதக்­கத்தை தனதாக்கும்.

அதே­வேளை குத்­துச்­சண்டை பெண்கள் பிரி­விலும் அனுஷா கொடி­து­வக்கு அரை­யி­று­திக்கு முன்­னேறி பதக்கம் ஒன்றை உறு­தி­செய்­துள்ளார். இவர் இன்று உலக சம்­பி­ய­னான இந்­தி­யாவின் மேரி­கோமை எதிர்­கொள்­கிறார்.

21ஆவது பொது­ந­ல­வாய விளையாட்டு விழா அவுஸ்­தி­ரே­லி­யாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடை­பெற்று வரு­கி­றது. 71 அணிகள் பங்­கேற்கும் இந்த விளை­யாட்டுப் போட்­டிகள் கடந்த நான்காம் திகதி ஆரம்­ப­மா­யின. எதிர்­வரும் 15ஆம் திக­தி­வரை நடை­பெ­ற­வுள்ள இவ் விளை­யாட்டு விழாவில் இது­வ­ரை இலங்கை அணி ஒரு வெள்ளிப் பதக்­கத்­தை­யும் இரு வெண்­கலப் பதக்­கங்களையும் வென்­றுள்­ளது. அத்­தோடு இரு பதக்கங்கள் உறு­தி­யா­கி­யுள்ள நிலையில் தங்­கமோ வெள்­ளியோ வெண்­க­லமோ வெல்லும் பட்­சத்தில் இலங்­கையின் பதக்க எண்­ணிக்கை ஐந்­தாகும்.

வர­லாறு படைத்த திவங்க நேற்­றைய போட்­டியில் இரு­பா­ல­ருக்­கு­மான குத்­துச்­சண்டைப் போட்­டியில் இலங்கை அணி கலந்­து­கொண்­டது. இதில் நடை­பெற்ற முத­லா­வது போட்­டியில் பெண்கள் பிரிவில் இலங்­கையின் ஹன்­ஸிகா கேஷானி மற்றும் நியூஸிலாந்தின் பிரிட்சார்ட் அலக்ஸிஸ் ஆகியோர் மோதினர். இப் போட்­டியில் கேஷானி தோல்­வியைத் தழு­விக்­கொள்­ள  ஐந்­தா­வ­தாக நடை­பெற்­றது இலங்­கையின் வர­லாற்றை மாற்­றிய போட்டி.

இப் போட்­டியில் இலங்­கையின் திவங்க ரண­சிங்­க­வும் வனாட்டு நாட்டு வீரர் நம்ரி பெரியும் மோதினர். ஆரம்­பத்தில் வனாட்டு வீரரின் கையே ஓங்­கி­யி­ருந்­தது. ஆனாலும் தடுப்­பாட்­டத்­துடன் அவரை எதிர்கொண்ட திவங்க எதி­ராளி எதிர்­பாராத நேரத்தில் தாக்­குதல் நடத்­தி போட்­டியை 5–-0 என்ற புள்­ளிகள் அடிப்­ப­டையில் வென்று சாதனை படைத்து அரை­யி­றுதிச் சுற்­றுக்கு முன்­னே­றினார்.

இந் நிலை யில் திவங்­க­வுக்கு பதக் கம் ஒன்று உறு­தி­யா­கி­யுள்­ளது. அது எந்­தப்­ப­தக்கம் என்­பது போட்­டியின் முடி­வில்தான் தெரி­ய­வரும். திவங்­கவின் இப் பதக்க வெற்­றி­யா­னது பொது­ந­ல­வாய விளை­யாட்டு விழாவில் 68 வரு­டங்­க­ளுக்குப் பிறகு குத்துச்சண்டையில் இலங்கை வெல்லும் பதக்­க­மாகும்.

இதற்கு முன்னர் 1950ஆம் ஆண்டு இலங்ை­கயின் கே.எட்வின் 51 கிலோ எடைப் பிரி­வி­லும் ஏ.பெரேரா 54 கிலோ எடைப் பிரி­விலும் வெள்ளிப்பதக்கம் வென்­றி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

பழி­தீர்ப்­பாரா அனுஷா?

ஐந்­து­முறை குத்­துச்­சண்டை சம்­பி­ய­னான இந்­தி­யாவின் மேரி­கோ­முடன் அரை­யி­று­திப்­போட்­டியில் இலங்­கையின் அனுஷா கொடி­து­வக்கு இன்று மோது­கின்றார். இவர்கள் இரு­வரும் ஏற்­க­னவே கடந்த 2016ஆம் ஆண்டு நடை­பெற்ற தெற்­கா­சிய விளை­யாட்டு விழாவின் இறுதிப் போட்­டியில் மோதி­யி­ருந்­தனர்.

இப் போட்­டியில் மேரிகோம் வெற்­றி­பெற்று தங்­கப்­ப­தக்­கத்தை தன­தாக்­கி­யி­ருந்தார். இதில் அனுஷா கொடி­து­வக்கு கடு­மை­யான தாக்­கு­த­லுக்குள்­ளா­கியிருந்தார். அத்­தோடு அனு­ஷாவின் காலும் உடைந்து ஒரு ஆண்­டுக்கும் மேலாக அவர் காயத்­தால் அவ­திப்­பட்டு வந்தார்.

இந்­நி­லையில் இவ்விரு­வரும் மீண்டும் களம்­காண்­கின்­றனர். அதனால் இப் போட்டி மேலும் எதிர்­பார்ப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.  மேரி­கோ­முடன் மோது­வது குறித்து அனு­ஷா­விடம் வினவிய போ­து மேரி­கோ­முடன் மோது­வது இல­கு­வா­னதல்ல என­்பதை நான் நன்கறிவேன். தெற்­கா­சிய விளை­யாட்டு விழாவில் அவர் வேண்­டு­மென்றே என் மீது தாக்­குதல் நடத்­தினார் என்று நினைக்­கிறேன்.

அதனால் இதற்கு பதி­லடி கொடுக்க நான் இன்­றைய போட்­டியில் வெற்­றி­பெ­ற­வேண்டும். இப் ேபாட்­டியில் வெற்­றி­பெற்று நாட்­டுக்கு பெருமை தேடித்­தர என்னால் முடிந்த வரை போரா­டுவேன் என்றார். 

தட­களப் போட்­டிகள் ஆரம்பம்

தட­களப் போட்­டி­களில் இலங்­கையின் உயரம் பாயும் வீரர் மஞ்­சுள குமார இறு­திப்­போட்­டிக்கு தகு­தி­பெற்றார். அத்­தோடு நீளம்­பாய்­தலில் இலங்கை வீரர் ஜனக்க பிரசாத் 7.8 மீற்றர் தூரம்­பாய்ந்து ஐந்­தா­வது இடத்தைப் பெற்று இறு­திப்­போட்­டிக்கு முன்­னே­றினார். அத்­தோடு 200 மீற்றர் தகு­திகாண் போட்­டியில் ருமே­ஷிகா ரத்­னா­யக்க 23.43 வினாடிகளில் ஓடி­மு­டித்து அரை­யி­றுதிச் சுற்­றுக்கு தகு­தி­பெற்றார். உயரம் பாய்தல் மற்றும் நீளம் ­பாய்தல் ஆகி­ய­வற்றின் இறு­திப்­போட்­டிகள் இன்று நடை­பெ­ற­வுள்­ளன. பொது­ந­ல­வாய விளை­யாட்டு விழாவின் தட­களப் போட்­டிகள் நேற்று ஆரம்­ப­மாயி­ன. கராரா மைதா­னத்தில் நடை­பெறும் தட­களப் போட்­டி­களில் மொத்தம் 945 வீரர்கள் கலந்­து­கொள்­கின்­றனர். இதில் 549 வீரர்­க­ளும் 396 வீராங்­க­னை­களும் பற்­கேற்­கின்­றனர். இதில் ஆண்கள் மர­தனில் பங்­கேற்­றுள்ள கென்ய வீரர் மபுரு முங்­குரா இத் தொடரின் அதி­கூ­டிய வயதுடைய வீர­ராகத் திகழ்­கிறார். இவ­ருக்கு 44 வயது, 7 மாதம், ஒரு­நாளும் ஆகின்­றது. அதேபோல் குறைந்த வயது வீர­ராக ஆண்கள் 400 மீற்றர் போட்­டியில் கலந்­து­கொள்ளும் மலாவி வீரர் டலிட்சோ குண்டே திகழ்­கிறார். இவ­ருக்கு 15 வயது, 9 மாதம், 12 நாட்கள் ஆகின்­றது.

   முத­ல­ாவது பெண் நடுவர்

பொது­ந­ல­வாய விளை­யாட்டு விழாவில்  இலங்­கையின் நெல்கா ஷிரோ­மலா குத்­துச்­சண்டைப் போட்­டியில் கள நடு­வ­ராக செயற்­பட்டார். பொது­ந­ல­வாய விளை­யாட்டு விழாவில் முதன்­மு­றை­யாக நடு­வ­ராக செயற்­பட்ட பெண் இவ­ராவார். கானா மற்றும் தென்­னா­பி­ரிக்க வீரர்­க­ளுக்­கி­டையில் நடை­பெற்ற போட்­டி­யின்­போதே அவர் நடு­வ­ராக செயற்­பட்­டி­ருந்தார்.

கடந்த 2002 ஆம் ஆண்டு இலங்கையின் பொலிஸ் குத்­துச்­சண்டை அணியில் இடம்­பெற்­றி­ருந்த நெல்­கா பொலிஸ் அணியில் இடம்­பெற்ற முத­லா­வது வீராங்­கனை என்ற வர­லாற்­றையும் படைத்­துள்ளார். 2011ஆம் ஆண்டு இலங்­கையின் முத­லா­வது பெண் நடுவர் என்ற பட்­டத்­துடன் சர்­வ­தேச களத்­திற்குள் நுழைந்த நெல்­கா அவ்வாண்டு நடை­பெற்ற லண்டன் ஒலிம்­பிக்கில் அலு­வ­லக நடு­வ­ராக செயற்­பட்டார். அதன்­தொ­டர்ச்­சி­யாக  தற்­போது பொதுநலவாய போட்­டியில் முதன்முறை­யாக களம்­கண்­டுள்ளார்.

பட்­மிண்­டனில் இந்­தி­யா­வுக்கு தங்கம்

இந்­திய பட்­மிண்டன் அணி மலே­சி­யாவை 3-–1 என வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்­றது. கலப்பு பட்­மிண்டன் அணி­க­ளுக்கிடை­யி­லான இறுதிப் போட்­டியில் இந்­திய–மலே­சிய அணிகள் பலப்­ரீட்சை நடத்­தின.

முதல் ஆட்­டத்தில் இந்­தி­யாவின் சாத்விக் ராங்­கி­ரெட்டி – அஸ்­வினி பொன்­னப்பா ஜோடி மலே­சி­யாவின் பெங் சூன் சான் – லியூ யிங் கோஹ் ஜோடியை எதிர்­கொண்­டது. முதல் செட்டை 21-–14 எனக் கைப்­பற்­றிய இந்­திய ஜோடி 2ஆவது செட்டை 15-–21 என இழந்­தது. ஆனால் 3ஆவது செட்டை 21-–15 எனக் கைப்­பற்­றி­யது. 2- ஆவது ஆட்­டத்தில் ஸ்ரீகாந்த் கிதாம்பி மலே­சி­யாவின் சாங் வெய் லீ-யை எதிர்­கொண்டார். இதில் ஸ்ரீகாந்த் கிதாம்பி 21–17, 21-–14 என எளிதில் வெற்றி பெற்றார். இதனால் இந்­தியா 2–-0 என முன்­னிலை பெற்­றது. ஐந்து ஆட்­டங்களில் மூன்றை கைப்­பற்­றினால் தங்கம் வென்று விடலாம் என்ற நோக்­கத்தில் இந்­தி­யாவின் சாத்விக் ராங்­கி­ரெட்டி - –சிராக் சந்­தி­ர­சே­கரர் ஷெட்டி ஜோடி ஷெம் கோஹ் - வீ –கியோங் டான் ஜோடியை எதிர்கொண்டது. இதில் இந்திய ஜோடி 15–-21, 20–-22 என்ற நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தது. இதனால் ஸ்கோர் 2-–1 என இருந்தது.

4ஆவது ஆட்டத்தில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சாய்னா நேவால் மலேசியாவின் சோனியா சியா-வை எதிர்கொண்டார். முதல் செட்டை சாய்னா 21–-11 என எளிதில் கைப்பற்றினார். ஆனால் 2ஆவது செட்டை 19-–21 என போராடி இழந்தார். ஆனால் வெற்றியைத் தீர்மானிக்கும் 3ஆவது செட்டில் சாய்னா அபாரமாக விளையாடி 21–-9 எனக் கைப்பற்றினார். இதனால் இந்தியா 3-–1 என வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. இதன் மூலம் இந்தியா 10 தங்கப் பதக்கங்களை கைப்பற்றியுள்     ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குசல் மெண்டிஸின் அரைச் சதம் இலங்கைக்கு...

2025-02-07 20:48:52
news-image

14ஆவது இந்துக்களின் சமர்: பலமான நிலையில்...

2025-02-07 20:17:12
news-image

ஜடேஜாவின் துல்லியமான பந்துவீச்சு, கில், ஐயர்,...

2025-02-07 17:05:20
news-image

புனித சூசையப்பர் அணியின் 11 வயது...

2025-02-07 13:22:16
news-image

இந்துக்களின் சமர் - நாணய சுழற்சியில்...

2025-02-07 11:38:55
news-image

14ஆவது இந்துக்களின் கிரிக்கெட் சமர்  யாழ்....

2025-02-06 19:07:08
news-image

100ஆவது டெஸ்டில் விளையாடும் திமுத் கருணாரட்ன...

2025-02-06 14:37:36
news-image

முதலில் துடுப்பாட்டத்திலோ, பந்துவிச்சிலோ ஈடுபட்டால் அதில்...

2025-02-05 20:39:54
news-image

சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அரங்கிலேயே சர்வதேச...

2025-02-05 20:26:28
news-image

ரி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி...

2025-02-05 13:38:39
news-image

துடுப்பாட்ட சாதனையுடன் பந்துவீச்சிலும் அசத்திய அபிஷேக்...

2025-02-03 18:09:33
news-image

19 வயதின் கீழ் மகளிர் உலகக்...

2025-02-03 15:26:27