கண்டி வன்­மு­றைகள் : இரா­ணுவ கோப்­ரல்கள் இருவர் கைது.!

Published By: Robert

10 Apr, 2018 | 09:02 AM
image

கண்டி மாவட்­ட­மெங்கும் இடம்­பெற்ற இன ரீதி­யி­லான வன்­மு­றை­களின் போது முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள்,  பள்­ளி­வா­சல்கள் மீது தாக்­குதல் நடாத்தி தீ வைத்­தமை தொடர்பில் சேவையில் உள்ள இரு இரா­ணுவ கோப்­ரல்கள் நேற்று பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வி­னரின் சிறப்புக் குழு­வி­னரால் நேற்று கைது செய்­யப்­பட்­டனர்.  கண்டி - பூஜா­பிட்­டிய பொலிஸ் பீர்வில் அம்­ப­தென்ன பகு­தியில் முஸ்லிம் பள்­ளி­வா­சல்கள் மற்றும் வர்த்­தக நிலை­யங்கள் மீதான தாக்­கு­தல்கள் மற்றும் தீ வைப்பு தொடர்பில் இவர்கள் இரு­வ­ரையும் கைது செய்­த­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர கேச­ரிக்கு  தெரி­வித்தார்.

 கஹ­வத்த, அம்­ப­தென்ன பகு­தியை வசிப்­பி­ட­மாக கொண்ட இரா­ணுவ கோப்ரல் தர வீரர்­க­ளான, 34 வய­து­டைய புத்­தளம்,சிங்­ஹ­வில்­லு­வத்­தவில் உள்ள 143 ஆவது படை­யணி தலை­மை­ய­கத்தில் சேவை­யாற்றும் 475030 எனும் இரா­ணுவ இலக்­கத்தை உடைய சுப­சிங்க முதி­யன்­ச­லாகே அனுர பண்­டார விஜே­சிங்க என்­பவர் கைதா­ன­வரில் ஒரு­வ­ராவார். கைதான மற்­றை­யவர்  38 வய­து­டைய, கெக்­கி­ராவ - தம்­பு­லு­ஹல்­மில்­ல­வி­லுள்ள இயந்­திர மற்றும் காலாற்­படை ரெஜி­மென்ட்டின்  பயிற்சி பாட­சா­லையில் சேவை­யாற்­றிய மல்­வானே கெதர ஹசித்த விஜே­ரத்ன ஆவார்.

2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில், அர­சியல் உரி­மைகள் தொடர்­பி­லான சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்­டத்தின் விதிகள், தண்­டனை சட்டக் கோவையின் கீழ் கைத­கை­யுள்ள சந்­தேக நபர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.  . அதன்­படி இது­வரை பயங்­க­ர­வாத புல­ன­யவுப் பிரி­வினர் முன்­னெ­டுக்கும் பிர­தான விசா­ர­ணை­களில் கைதான சந்­தேக நபர்கள் 15 பேர் ஆவர். அதில் ஒரு முன்னாள் இரா­னுவ வீரரும் உள்­ள­டங்­கிறார்.  இந் நிலை­யி­லேயே நேற்று பயங்­க­ர­வாத புல­ன­யவுப் பிரிவின் சிரப்புக் குழு தற்­போது சேவையில் உள்ள இரு இரா­ணுவ வீரர்­களைக் கைது செய்­துள்­ளனர்.  

 கண்டி இனவாத வன்முறைகள் தொடர்பில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பிரதானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா, அதன் பதில் பணிப்பாளர் ஜகத் விஷாந்த தலமையில் விஷேட  மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளரின் நடவடிக்கை குறித்து...

2026-02-11 17:20:23
news-image

தேர்ந்தெடுக்கப்பட்ட நீதி மற்றும் அரசியல் உள்நோக்கம்...

2026-02-11 19:01:22
news-image

இந்த ஆண்டுக்குள் தேர்தலை நடத்த வாய்ப்பில்லை...

2026-02-11 15:22:48
news-image

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என உறுதியளித்தபோதிலும்,...

2026-02-11 18:46:10
news-image

மாகாணசபை தேர்தல் நடத்த அரசு தயக்கம்...

2026-02-11 17:28:08
news-image

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் :...

2026-02-11 18:43:13
news-image

சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த எந்த நாடும்...

2026-02-11 21:24:46
news-image

தட்டுப்பாடின்றி மருந்துகளை வழங்க வைத்தியசாலையில் மருந்துகள்...

2026-02-11 17:04:09
news-image

திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை: 4...

2026-02-11 19:26:14
news-image

2025 ஆம் ஆண்டில் சுமார் 2,355...

2026-02-11 17:01:17
news-image

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி : தம்பதிகள்...

2026-02-11 16:15:32
news-image

ஐரோப்பிய ஒன்றிய பிரமுகர்களை சந்தித்த சாணக்கியன்,...

2026-02-11 18:08:18