தமிழீழ விடுதலைப்புலிகளால் புதைத்து வைக்கப்பட்டதாக நம்பப்படும் பெருந்தொகையான வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் என்பன முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் இன்றையதினம் மீட்கப்பட்டுள்ளது.
வவுனியா விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா விசேட அதிரடிப்படை அதிகாரி எஸ் பி சில்லெஸ்டரின் தலைமையில் முல்லைத்தீவு உதவி பொலிஸ் பொறுப்பதிகாரி சி ஐ ஆனந்த தலைமையில் முல்லைதீவு விசேட அதிரடிப்படையினரும் இணைந்து இந்த அகழ்வு நடவடிக்கையை மேற்கொண்டு ஆயுதங்களை மீட்டுள்ளனர்.
நான்கு தண்ணீர் தாங்கிகளில் வைக்கப்பட்டு புதைக்கப்பட்ட நிலையில் மைக்கிறோ பிஸ்டல் ரவைகள் 3000,கைகுண்டுகள் 34, தமிழன் கைக்குண்டு 22,மிதிவெடிகள் 48,ஆர் பி ஜி எறிகணைகள் 7,ஜிபிஎம்ஜி ரவைகள் 2000,விமான எதிர்ப்பு ரவைகள் 1710,டேகிணற்றோர்கள் 06, கிளைமோர் 04,விடுதலைப்புலிகளின் தயாரிப்பான அருள் எறிகணைகள் 34,சி4 வெடிமருந்து 48kg என்பன மீட்கப்பட்டு பாதுகாப்பாக அழிப்பதற்காக விசேட அதிரடிப்படையினரால் எடுத்து செல்லப்பட்டன .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM