இலங்கை கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டு சுப்பர் ப்ரொவென்ஷியல் கிரிக்கெட் தொடரின் பகலிரவுப் போட்டிகள் இரண்டு இன்று நடைபெறவுள்ளன. இளஞ் சிவப்பு நிற பந்தில் விளையாடப்படும் இந்த போட்டிகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளன.
இதில் காலி அணிக்கும் தம்புள்ளை அணிக்கும் இடையிலான போட்டி தம்புள்ளை மைதானத்திலும், கொழும்பு அணிக்கும் கண்டி அணிக்கும் இடையிலான போட்டி ஹம்பாந்தோட்டை மைதானத்திலும் நடைபெறவுள்ளன.
4 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட சுப்பர் ப்ரொவென்ஷியல் கிரிக்கெட் தொடர் கடந்த 30 ஆம் திகதியன்று ஆரம்பமானது. இதில் கொழும்பு, காலி, கண்டி, தம்புள்ளை ஆகிய நான்கு அணிகள் விளையாடி வருகின்றன. இதன் முதலிரு போட்டிகளில் சுரங்க லக்மால் தலைமையிலான காலி அணி தினேஷ் சந்திமால் தலைமையிலான கொழும்பு அணியை எதிர்த்தாடியது.
மற்றைய போட்டியில் தம்புள்ளை அணியை கண்டி அணி எதிர்த்தாடியது. காயம் காரணமாக முதல் போட்டியில் பங்கேற்காத கண்டி அணித்தலைவரான எஞ்சலோ மெத்தியூஸ் இன்றையப் போட்டியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM