ஐ.பி.எல். ஆ ? தமிழக மக்களின் கோரிக்கையா ?  இந்திய அரசு யார் பக்கம்?

Published By: Priyatharshan

07 Apr, 2018 | 11:49 AM
image

இந்தியன் பிரிமியர் லீக் என அழைக்கப்படும் ஐ.பி.எல். தொடர் இன்று மிக கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது. 

இத் தொடர் இன்று முதல் எதிர்வரும் மே மாதம் 27 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இதில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. இரு வருட தடைகளின் பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டோனி தலைமையிலும், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி பென் ஸ்டொக் தலைமையிலும் களமிறங்க உள்ளது கூடுதல் சுவாரஸ்யமாகும். 

அத்தோடு அடுத்ததடுத்த அணி மாற்றங்கள் விரர்களின் விபரங்கள் என பரபரப்பிற்கு குறைவில்லாமல் இம் முறை ஜ.பி.எல் தொடர் ஆரம்பமாக உள்ளது.

இத் தொடரின் முதல் போட்டியானது நடப்பு சம்பியனான ரோஹித் சர்மாவின் மும்பை இந்தியன்ஸ் அணியும், இரு வருடங்களின் பின் புதுப் பொலிவோடு டோனி தலைமையிளான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

இவ்வாருட ஐ.பி.எல் சுவாரஸ்யங்கள் சூடு பிடித்துக் கொண்டிருக்க மருபுறம் தமிழ்நாட்டில் போராட்டங்கள் வெடித்துக் கொண்டிருக்கின்றன. 

காவிரி மேலான்மை மற்றும் அணுவாலை அமைப்பதற்கு எதிராகவும் கலவரங்கள் இடம் பெற்று வருகின்றன.

இதற்கிடையில் ஐ.பி.எல். தொடரின் சில போட்டிகள் எதிர்வரும் 10 ஆம் திகதி சென்னையில் இடம்பெறவுள்ளன. இது குற்த்து மனிதநேய ஜனநாயக கட்சியினரும் காவிரி உரிமை மீட்பு குழுவினரும் சென்னையில் ஐ.பி.எல்லை நடத்தக் கூடாது எனக் கூறி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் காவிரி மேலாண்மையை அமைத்து தர முடியாத அரசு கிரிகெட் நடத்த அனுமதியளித்துள்ளது. இங்கு விவசாயிகள் கண்ணீர் விட்டு கொண்டிருகின்றனர், குடிக்க தண்ணீர் கிடைக்குமா? என மக்கள் ஏங்கிக் கொண்டிருக்க உங்களுக்கு கிரிகெட் அவசியமா? அப்படி ஐ.பி.எல்லை சென்னையில் நடத்தினால் நாங்கள் மைதானதிற்குள் புகுந்து கலவரம் செய்வோம், என எதிர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். 

இதேவேலளை தமிழ்நாட்டு திரையரங்குகளில் ஐ.பி.எல் போட்டிகளை ஒளிபரப்பு செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இது குறித்தும் தற்போது பல சர்சைகள் எழுந்துள்ளன. இவ்விடயம் தொடர்பில் கிரிகெட் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியைத் தந்தாலும் நாட்டு மக்களை சிந்திக்கும் போது வேதனையாகவும் உள்ளது. இங்கு பணம் படைத்தவருக்கே முதல் மரியாதை என்பது இவர்களது செயற்பாடுகளிலேயே தெரிந்துவிட்டது. 

கிரிகெட் ஒரு போட்டி என்ற எண்ணம் போய், அது பணத்தை வைத்து விளையாடும் சூதாட்டம் என்ற எண்ணம் மக்களிடையே வந்துவிட்டது.

இது குறித்து இந்திய அரசு தமது உரிமைகளுக்காக போராடும் மக்களுக்காக குரல்கொடுக்குமா ?  அல்லது பணம் முதலைகளுக்கு பின் சென்று வாயடைத்து நிற்குமா ? என்பது வெறும் காணல் நீராகவே தோன்றுகின்றது....

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கிட்டு மீதான கொலை முயற்சி

2025-01-21 14:07:54
news-image

காசா பள்ளத்தாக்கு போர்நிறுத்தம் நின்றுபிடிக்குமா?

2025-01-21 14:08:15
news-image

"தையிட்டி விகாரையை தென்பகுதி சிங்கள மக்கள்...

2025-01-21 13:08:03
news-image

அதிகாரம் படைத்தவர்களுடன் எந்தவிதமான சமரசத்திலும் ஈடுபடாமல்...

2025-01-21 08:45:36
news-image

எதிர்கால சந்ததியினர் மத்தியில் அச்சுறுத்தலாக மாறும்...

2025-01-19 16:20:27
news-image

கிறிப்டோ கரன்சி என்றால் என்ன? இலங்கையில்...

2025-01-19 16:10:32
news-image

பனிப்பாறைகளின் இறையாண்மை

2025-01-19 15:56:51
news-image

சமஷ்டிக் கோரிக்கை தமிழரசுக்கட்சியின் அஸ்தமித்துப்போன கனவா?...

2025-01-19 15:45:57
news-image

உயிர்களை பறிக்கும் வீதி விபத்துக்கள்

2025-01-19 15:33:13
news-image

தேவைப்படுவது தமிழ் மைய அரசியலே

2025-01-19 15:18:20
news-image

சேமிப்பாளர்களுக்கு நன்மையளிக்கக்கூடிய விதத்தில் புதிய நிதியியல்...

2025-01-19 15:13:50
news-image

அரசியல் கட்சிகளின் நிலைபேற்றை விடவும் சமூகத்தின்...

2025-01-19 15:06:36