' யொவுன் புரய " சர்வதேச இளைஞர் மாநாட்டில் ஜனாதிபதி , பிரதமர் , அரச பிரதிநிதிகள் , இளைஞர் கழகங்கள் மற்றும் ஊடகங்கள் என சுமார் 7000 பேர் கலந்துக்கொண்டனர்.
மார்ச் மாதம் 28 ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி வரையில் ' யொவுன் புரய " நிகழ்வுகள் இடம்பெற்றன.
கொள்கை திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுடன் சேர்ந்து தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் இந்த நிகழ்ச்சியை முன்னெடுத்தது.
தேசிய அபிவிருத்தியில் இளைஞர்கள் பங்களிப்பு செய்யும் வகையில் ஆண்டுதோறும் இந்நிகழ்ச்சி நடாத்தப்படுகிறது.
கலாசார மரபுரிமைகள் மற்றும் உலக சமாதானம் போன்ற துறைசார் கருத்தாடல்கள் இதன்போது இடம்பெற்றமை முக்கிய அம்சங்களாகும்.
கொரியாவை தளமாகக்கொண்ட அரச சார்பற்ற நிறுவனமான எச்.டபிள்யூ.பி.எல். இதில் இணைந்துகொண்டது.
இந்த நிகழ்வில் இளைஞர்களிடையே சமாதானம் தொடர்பான செயற்பாட்டை முன்னெடுக்கும் வகையில் 7000 பேர் சமாதான பிரகடனம் மற்றும் யுத்தத்தை நிராகரிக்கும் தீர்மானத்தில் கையெழுத்திட்டனர்.
ஐக்கிய நாடுகள் சபையும் இந்த திட்டத்தில் பங்காளியாக செயற்படுகின்றது. சமாதானத்தைக் கட்டியெழுப்ப சர்வதேச சட்டத்தை ஏற்புடையதாக்கும் தீர்மானத்தை கடந்த மார்ச் 14 ஆம் 2016 இல் அறிவிக்கப்பட்டது.
இந்த சட்டமானது சர்வதேச சட்ட நிபுணர்களால் உருவாக்கப்பட்டது. இது யுத்த சம்பந்தமான செயற்பாட்டை தவிர்த்தல், சமாதானத்தை எட்டுதல் , சர்வதேச சட்டத்தை மதித்தல், இன, மத ஒற்றுமை, சமாதான கலாசாரம் எனும் அம்சங்கள் உள்ளடக்கியதாகக் காணப்படுகிறது.
இலங்கையில் 2009 வரை 30 வருட காலம் யுத்த சூழல் இருந்துள்ளது. எனவே இலங்கை மக்கள் யுத்தம் பற்றி நன்கு அறிவர்.
மீண்டும் யுத்தம் ஏற்பட ஒருவரும் விரும்பவில்லை. எனவே இதன்படி இந்த சட்டத்தை இலங்கையில் சுலபமாக நடைமுறைப்படுத்த முடியும். இத்தகவல் இளைஞர் மூலம் மக்களிடம் எடுத்துச்செல்ல முடியும் என தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பிரதிப் பணிப்பாளர் பிரபாத் லியனகே வலியுறுத்தினார்.
இளைஞர்கள் நாட்டின் முதுகெலும்பாக உள்ளனர். எச்.டபிள்யூ.பி.எல் உடன் இணைந்து நாட்டின் அனைத்து பகுதிகளிலும் விழிப்புணர்வு நிகழ்வுகளை ஏற்பாடு செய்யலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.
இரண்டாவது வருடாந்த டி.பி.சி.டபிள்யூ மகாநாடு கொரியாவில் அண்மையில் நடைபெற்றது. சமாதான எதிர்ப்பு நிகழ்வுகளிற்கு எதிரான எச்.டபிள்யூ.பி.எல். அலுவலக அறிவிப்பு வெளியிடப்பட்டது.
யொவுன் புரய இளைஞர் திருவிழாவில் இலங்கையின் சகல மட்டத்தில் இருந்தும் தலைவர்கள் பங்கேற்றனர். இதன்போது சமாதான ஊர்வலங்கள் இடம்பெற்றது. இதில் சமாதானத்திற்கு எதிரான நிகழ்வுகளிற்கு எதிர்ப்பும் சர்வதேச சட்டத்தை சமூக நீதிக்காக முன்மொழிவு போன்றன வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM