தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் ; 10 இலட்சம் பேர் கைது -மு க ஸ்டாலின்

Published By: Priyatharshan

05 Apr, 2018 | 03:03 PM
image

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து இன்று நடந்த முழு அடைப்பு போராட்டத்தின் போது பத்து லட்சம் பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், போராட்டம் முழு வெற்றிப பெற்றிருப்பதாகவும் தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் சென்னையில் ஊடகவியலாளர்களிடம் தெரிவிக்கையில்,  

‘ உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பு தந்த பிறகும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு தொடர்ந்து காலம் கடத்தி வருகிறது.

இதற்கு ஏற்றாற்போல் அடிமை அரசாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி நடக்கிறது. எனவே இதை கண்டிக்கும் வகையில் உடனே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி அனைத்து கட்சி கூட்டத்தில் எடுத்த முடிவின்படி தமிழ்நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தி உள்ளோம்.

இதுவரை தமிழ்நாட்டில் இப்படி ஒரு முழு அடைப்பு நடந்திராத அளவுக்கு மிகப்பெரிய அளவில் 100 சதவீத அளவுக்கு முழு அடைப்பு வெற்றி பெற்றுள்ளது. இதற்கு ஒத்துழைத்த பல்வேறு கட்சித் தலைவர்கள், வணிகர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

சென்னையில் இன்று மாலை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. மறியல் போராட்டத்தில் பங்கேற்று அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதால், இன்று மாலை நடைபெற இருந்த அனைத்துக் கட்சி கூட்டம் தள்ளி வைக்கப்பட்டு நாளை காலை 10.30 மணிக்கு எனது தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும். இதில் காவிரி உரிமை மீட்பு பயணத்தை 7 ஆம் திகதி திருச்சி முக்கெம்பில் இருந்து தொடங்குவது பற்றி ஆலோசிக்கப்படும்.

இன்றைய மறியல் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் 10 லட்சம் பேர் கைதாகி உள்ளதாக தகவல்கள் வருகிறது. தமிழகத்தில் மக்களின் போராட்டத்துக்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசித்து முடிவு எடுப்போம். மத்திய அரசு இப்போது உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவை திரும்பப்பெற வேண்டும். இதற்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். சென்னை வரும் பிரதமருக்கு கறுப்பு கொடி காட்டுவது குறித்தும் நாளைய கூட்டத்தில் கலந்து பேசி முடிவு எடுப்போம்.’ என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13