அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் இடம்பெற்றுவரும் 21 ஆவது பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டி (கொமன்வெல்த் விளையாட்டு) இலங்கைக்கு முதலாவது பகத்கம் கிடைத்துள்ளது.
பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான 56 கிலோகிராம் பழுதூக்கும் போட்டியில் சதுரங்க லக்மால் ஜயசூரிய இலங்கைக்கு வெண்கலப் பதக்கத்தை பெற்றுக்கொடுத்துள்ளார்.
இப் போட்டியில் மலேசியா தங்கப்பதக்கத்தை வென்றுள்ளதுடன் இந்தியா வௌ்ளிப் பதக்கத்தை வென்றுள்ளது.
6600 வீர, வீராங்கனைகள் போட்டியிடவுள்ள பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டி (கொமன்வெல்த் விளையாட்டு) அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் கோலாகலமாக ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. இம்முறை நடைபெறவுள்ள போட்டிகளில் ஆண், பெண் இருபாலாருக்கும் சரிசமமான தங்கப்பதக்கங்கள் வழங்கப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் பொதுநலவாய விளையாட்டு விழா இம்முறை 21ஆவது தடவையாக கோல்ட் கோஸ்டில் நடைபெறுகின்றது.
இம்முறை இலங்கை 13 வகையான போட்டிகளில் பங்குபற்றுகின்றது. இதற்கு மொத்தம் 80 வீரர்கள் வரை வருகை தந்துள்ளனர். பயிற்சியாளர்களுடன் சேர்த்து மொத்தம் 150 பேர் இம்முறை போட்டித் தொடரில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளனர்.
இதில் மெய்வல்லுநர் போட்டிகளில் 13 வீரர்களும், பளுதூக்கல் போட்டிகளில் 11 பேரும், மல்யுத்தம் 6, எழுவர் றக்பி 12 வீரர்களையும் கொண்ட அணிகளே அதிக வீரர்களை உள்ளடக்கி இம்முறை போட்டிகளில் கலந்துகொள்கின்றன.
கடந்த 4 ஆம் திகதி ஆரம்பமாகிய பொதுநலவாய விளையாட்டு விழா மொத்தம் 11 நாட்கள் நடைபெற்று எதிர்வரும் 15 ஆம் திகதி நிறைவு பெறுகின்றது.
இதில் மொத்தம் 25 வகையான விளையாட்டு பிரிவுகளில் 275 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதுவரையில் நடைபெற்றுள்ள பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளின் பதக்க பட்டியலின் அடிப்படையில் 852 தங்கப்பதக்கங்களுடன் 2218 மொத்தப் பதக்கங்களைப் பெற்று அவுஸ்திரேலியா முதலிடத்தில் நீடிக்கிறது. 669 தங்கங்களுடன் இங்கிலாந்து இரண்டாவது இடத்திலும், கனடா 469 தங்கப் பதக்கங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM