மெக்ஸிக்கோவில் இடம் பெற்று வரும் போதைவஸ்துக் கடத்தல் நடவடிக்கைகள் குறித்து பாப்பரசர் பிரான்சிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மெக்ஸிக்கோவுக்கு விஜயம் செய்துள்ள அவர் அந்நாட்டின் தலைநகரின் புறநகரப் பகுதியான எகாதெபெக்கில் இடம்பெற்ற திறந்தவெளி ஆராதனை நிகழ்வில் 300,000 க்கும் அதிகமான பார்வையாளர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
1.6 மில்லியன் பேரை சனத்தொகையாகக் கொண்ட எகாதெபெக் போதைவஸ்து வன்முறைகள், கடத்தல்கள், குழு ரீதியான படுகொலைகள் – குறிப்பாக பெண்களின் படுகொலைகளுக்குப் பிரசித்தி பெற்ற சர்ச்சைக்குரிய பிராந்தியமாக விளங்குகிறது.
இந்நிலையில் அங்கு உரையாற்றிய பாப்பரசர், போதைவஸ்து கடத்தல் செயற் பாடுகளை முடிவுக்கு கொண்டுவந்து துன்பப்படும் பொதுமக்களுக்கு நியாயம் கிடைக்க மெக்ஸிக்கோ தலைவர்கள் வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
போதைவஸ்து கடத்தலை ஒரு புற்றுநோயெனக் குறிப்பிட்ட பாப்பரசர், அது மெக்ஸிக்கோ சமூகத்தையே அழித்துவிடக்கூடிய அபாயமிக்கது என்று கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM